பெண் ஒருவரை காப்பாற்ற லண்டன் தேம்ஸ் நதியில் குதித்த நபருக்கு ஏற்பட்ட துயரம்
லண்டன் பாலத்தில் இருந்து விழுந்த ஒரு பெண்ணை மீட்பதற்காக தேம்ஸ் நதியில் குதித்த ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை நள்ளிரவு லண்டன் பாலத்தில் இருந்து பெண் ஒருவர் தேம்ஸ் நதியில் குதிப்பதை ஒருவர் அதிர்ச்சியுடன் பார்த்துள்ளார்.
இதனையடுத்து, சற்றும் யோசிக்காமல் அந்த நபரும் நதியில் குதித்து குறித்த பெண்ணை காப்பாற்ற முயன்றுள்ளார்.
இதே வேளை இன்னொரு நபரும் லண்டன் பாலத்தில் இருந்து குதித்து, எஞ்சிய இருவரையும் மீட்க முயன்றுள்ளார்.
இதனிடையே மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவயிடத்திற்கு படகு மூலம் விரைந்து வந்த மீட்புக்குழுவினர் அந்த பெண்ணையும் இரண்டாவதாக குதித்த நபரையும் காப்பாற்றியுள்ளனர்.
ஆனால் ஹெலிகொப்டர் மற்றும் கடற்படை சிறப்பு குழுவினராலும் முதலில் குதித்த நபரை மீட்க முடியாமல் போயுள்ளது.
இந்த நிலையில் அந்த நபரின் சடலம் தேம்ஸ் நதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நபரின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவு 12 மணி அளவிலேயே குறித்த பெண் லண்டன் பாலத்தில் இருந்து குதித்துள்ளார். இதை அந்த நேரம் காண நேர்ந்த இருவர் ஒருவருக்கு பின் ஒருவராக குதித்து அந்த பெண்ணை மீட்க முயன்றுள்ளனர்.
துரதர்ஷ்டவசமாக அதில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.