இளவரசர் பிலிப் இறுதி சடங்கு முடிந்து அடுத்த 24 மணிநேரத்திற்குள் பிரித்தானியாவை விட்டு வெளியேறுவார் இளவரசர் ஹரி!
இளவரசர் பிலிப் இறுதி சடங்கு முடிந்த பிறகு இளவரசர் ஹரி பிரித்தானியாவில் தங்கமாட்டார் என அரசு குடும்ப நிபுணரும் எழுத்தாளருமான Ingrid Seward தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப்(99) ஏப்ரல் 9ம் திகதி வின்ட்சர் கோட்டையில் காலமானார். ஏப்ரல் 17ம் திகதி இளவரசர் பிலிப் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தாத்தாவும் இளவரசருமான பிலிப்பின் இறுதி சடங்கில் கலந்துக்கொள்ள அரச குடும்ப பொறுப்பிலிருந்து விலகி குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த இளவரசர் ஹரி பிரித்தானியா வந்துள்ளார்.
பிரித்தானியா வந்த இளவரசர் ஹரி, தற்போது Frogmore Cottage-ல் தனிமைப்படுத்தலில் இருக்கிறார்.
சனிக்கிழமை இளவரசர பிலிப் இறுதி சடங்கு முடிந்த 24 மணிநேரத்திற்குள் அமெரிக்க திரும்புவார் என அமெரிக்க வார இதழுக்கு அளித்த பேட்டியில் அரசு குடும்ப நிபுணரும் எழுத்தாளருமான Ingrid Seward கூறியுள்ளார்.
ஹரியின் மனைவி இளவரசி மேகன் கர்பமாக இருக்கிறார், விமானப் பயணம் மேற்கொள்ளக்ககூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால், அவர் இளவரசர் பிலிப் இறுதி சடங்கில் கலந்துக்கொள்ள பிரித்தானியா வரவில்லை.
இதனால், இறுதி சடங்கு முடிந்தவுடன் விரைவில் ஹரி மேகன் மற்றும் மகன் Archie-யிடம் செல்லவார் என்று நான் நினைக்கிறேன். அடுத்த நாள் அல்லது சனிக்கிழமையே அவர் கலிபோர்னியோ திரும்புவார் என Ingrid Seward கூறியுள்ளார்.
பிரித்தானியாவை விட்டு வெளியேறிய ஹரி, கடந்த ஒரு வருடங்களாக அரச குடும்ப உறவினர்களை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.