பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதி!
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று தற்போது பரோலில் உள்ள பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது பேரறிவாளன் ஒரு மாதத்துக்கு மேலாக பரோலில் வெளியில் உள்ளார்.
இந்த நிலையில் பேரறிவாளன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக தொற்று, வயிற்று வலி காரணமாக அவர் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதன் காரணமாக விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக பேரறிவாளன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.