என் அம்மா இறந்துவிடுவார்! ஆக்சிஜனை கொண்டு போகாதீங்க என கெஞ்சி கதறிய மகன்... அதிர்வலையை கிளப்பிய வீடியோ
இந்தியாவில் கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்ட தாயாருக்கு தரப்பட்ட ஆக்சிஜன் சிலிண்டரை எடுத்து செல்லாதீர்கள் என பொலிசாரிடம் மகன் கெஞ்சிய வீடியோ வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா பரவல் உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் உத்தரபிரதேசத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது.
இதனால், அம்மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதாக பரவலான தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
ஆனால், மாநிலத்தில் எந்த கொரோனா மருத்துவமனையிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்று உத்தரபிரதேச முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அம்மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனது அம்மா உயிரிழந்துவிடுவார்கள்... ஆக்சிஜன் சிலிண்டரை தயவு செய்து எடுத்து செல்லாதீர்கள் என்று பொலிசார் முன் மன்றாடிய மகனின் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அதன்படி ஆக்ராவில் அன்ஸ் கோயல் என்ற 17 வயது சிறுவனின் தாயார் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
This is a really heart breaking video.
— Youth Congress (@IYC) April 28, 2021
A man is begging in front of policeman not to take a Oxygen cylinder he has arranged for his mom in Agra, UP.
This is a total inhumane act by the police.
Is this how you should treat your fellow citizens Mr Yogi ? pic.twitter.com/Z4qTqsl5rY
இதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் தனது தாயாரை சிகிச்சைக்காக அனுமதித்திருந்த கோயல் மருத்துவமனையில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர் கொண்டு செல்லப்படுவதை தடுக்க பொலிசார் முன் மண்டியிட்டு மன்றாடியுள்ளார்.
அப்போது, தயவுசெய்து சார். நான் சிலிண்டரை எங்கிருந்து ஏற்பாடு செய்வேன்? நான் என் அம்மாவை திரும்ப அழைத்து வருவேன் என்று என் குடும்பத்தினருக்கு உறுதியளித்த பிறகு இங்கு வந்தேன்.
எனது அம்மா இறந்துவிடுவார். ஆக்சிஜன் சிலிண்டரை எடுத்து செல்லாதீர்கள். நான் உங்களிடம் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.
ஆனால் கோயல் பேச்சை கேட்காத பொலிசார் அந்த மருத்துவமனையில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டரை எடுத்து செல்வது போல வீடியோவில் உள்ளது.
இதன் பிறகு அடுத்த இரண்டு மணி நேரத்தில் கோயல் தாயார் உயிரிழந்துள்ளார். இதனிடையில் விஐபி யாருக்கோ ஆக்சிஜன் கொடுப்பதற்காக பொலிசார் கோயல் தாயாருக்கு வழங்கப்பட்ட ஆக்சிஜன் சிலிண்டரை எடுத்து சென்றதாக அவர் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இது குறித்து பொலிஸ் உயர் அதிகாரி கிருஷ்ணா கூறுகையில், இதில் ஈடுபட்ட காவலர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
இதனிடையில் இதில் சம்மந்தப்பட்ட பொலிசார் கூறுகையில், குறித்த சிலிண்டர்களில் ஆக்சிஜனே இல்லை, அது காலியாக இருந்தது என கூறியுள்ளனர்.