விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் மரணம்
அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பயணம் செய்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
விபத்துக்குள்ளான விமானம்
குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 230 பயணிகள், 12 விமான பணியாளர்களுடன் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது.
அகமதாபாத்தில் இருந்து விமானம் லண்டன் புறப்பட்டுச் சென்ற நிலையில், புறப்பட்ட 10 நிமிடங்களில் விமானம் விழுந்து நொறுங்கியது.
மதியம் 1.38 விமானம் புறப்பட்ட நிலையில், 10 நிமிடங்களில் அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்ததால் தீ பற்றிக் கரும்புகை வெளியானது.
விபத்தில் படுகாயமடைந்த பயணிகள் அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் மரணம்
அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி(68) விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ளார்.
லண்டனில் உள்ள தனது மகளை பார்க்க சென்ற குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி 12ஆவது பயணியாக பயணித்துள்ளார்.
இதற்கிடையில் விமானம் விபத்துக்குள்ளாகி நொறுங்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |