தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளியில் மார்க்ரேட் என பெயரிட்ட AI ஆசிரியர் அறிமுகம்
உலகம் முழுவதும் தற்போது செயற்கை நுண்ணறிவு எனும் AI தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது.
மார்க்ரேட் என்று பெயரிடப்பட்ட ஏ.ஐ. ரோபோடிக் ஆசிரியர் ராமேசுவரத்தில் செயல்படும் கிரைஸ்ட் தி கிங் சீனியர் செகண்டரி இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, நகரசபை சேர்மன் நாசர் கான் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
இதுகுறித்து பள்ளி முதல்வர் ஷாலினி பில்லி கிரஹாம், மனித உருவத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த AI ஆசிரியை பள்ளி மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது.
மாணவர்களின் கல்வித்திறனை ஊக்குவிப்பதற்காகவே பள்ளியில் இந்த ரோபோடிக் ஆசிரியை தொடங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் ஏ.ஐ. ரோபோட்டிடம் பல்வேறு கேள்விகள் கேட்டனர்.
அதற்கு ரோபோட்டிக் ஆசிரியை பதில் அளித்ததை மாணவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |