அதிமுகவில் இருந்து ஓ.பி.எஸ்- ஐ நீக்கியது செல்லாது! இ.பி.எஸ் பொதுச்செயலர் கிடையாது... நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கியதும் செல்லாது என நீதிபதி அதிரடி
ஜூலை 11-ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை பிறப்பித்துள்ளது.
அன்றைய தினம் நடைபெற்ற பொதுக்குழுவில் தான் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி , அதிமுகவில் ஜூன் 23ம் திகதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி இணைந்துதான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
மேலும் அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கியது செல்லாது எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. நீதிபதி ஜெயந்திரன் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
இந்த தீர்ப்பை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வரும் என நினைத்து பட்டாசு, மாலை, இனிப்புகளை கொண்டு வந்த அவர் ஆதரவாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.