இலங்கையின் முன்னாள் கேப்டனுடன் இணைந்த மார்க்ரம்! WTC இறுதிப்போட்டியில் வரலாற்று சாதனை
அவுஸ்திரேலியாவிற்கு எதிரான WTC இறுதிப்போட்டியில் சதம் விளாசியதன் மூலம், தென் ஆப்பிரிக்காவின் மார்க்ரம் பல சாதனைகளை படைத்துள்ளார்.
எய்டன் மார்க்ரம் சதம்
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் WTC இறுதிப்போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி ஏறக்குறைய வெற்றியை நெருங்கிவிட்டது.
அந்த அணியின் கைவசம் 8 விக்கெட்டுகள் உள்ள நிலையில் வெற்றிக்கு இன்னும் 69 ஓட்டங்களே தேவை.
143 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த எய்டன் மார்க்ரம் 102 ஓட்டங்களுடனும், டெம்பா பவுமா 65 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
இலங்கை அணியின் முன்னாள் தலைவர்
இதில் எய்டன் மார்க்ரம் சதம் விளாசியதன் மூலம், இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அரவிந்த டி சில்வா மற்றும் கிளைவ் லாய்ட் (மே.தீவுகள்) ஆகியோருடன் சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார்.
இவர்கள் இருவர் மட்டுமே ஐசிசி இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக சதம் விளாசியிருந்தனர்.
தற்போது தென் ஆப்பிரிக்க அணியின் தரப்பில் மார்க்ரம் சதமடித்துள்ளார். அத்துடன் ஒட்டுமொத்த ஐசிசி இறுதிப் போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்க அணிக்காக சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையையும் எய்டன் மார்க்ரம் (Aiden Markram) படைத்துள்ளார்.
மேலும், இந்த நூற்றாண்டில் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக (ஐசிசி இறுதிப்போட்டியில்) சதம் அடித்த முதல் வீரரும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |