ஜேர்மனியை முடக்கிய விமான மற்றும் ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தம்
ஜேர்மனியில் நடைபெற்றுவரும் வேலைநிறுத்தங்களால் பல மில்லியன் பயணிகள் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளதுடன், அந்நாட்டின் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளது.
விமான மற்றும் ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தம்
ஜேர்மனியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விமான மற்றும் ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்றும், அதாவது வியாழக்கிழமையும், ரயில்வே ஊழியர்களும், Lufthansa விமான நிறுவனத்தின் ground staff என்னும் விமான நிலைய ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், பல மில்லியன் பயணிகள் மாற்று போக்குவரத்தை நாடும் நிலை ஏற்பட்டது.
Jana Rodenbusch/Reuters
80 சதவிகித நீண்ட தூர ரயில்களும் உள்ளூர் சேவைகளும் பாதிக்கப்பட்டதால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் முதலான பிரச்சினைகளால் பணிக்குச் செல்லும் பயணிகள் கடுமையான அவஸ்தைக்குள்ளானார்கள்.
ஜேர்மனியின் பிஸியான பிராங்பர்ட் விமான நிலையம், ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக பல விமானங்களை ரத்து செய்ய நேரிட்ட நிலையில், இந்த நிலைமை ஞாயிற்றுக்கிழமை காலை வரை நீடிக்குமென எதிர்பார்க்கப்படுவதால், பயணிகள் தொடர்ந்து அவதிக்குள்ளாகலாம் என கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |