இந்தியாவை உலுக்கிய விமான விபத்தில் துருக்கி நாட்டிற்கு பங்கா? வெளிவரும் புதிய தகவல்
அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் பராமரிப்புக்கு துருக்கிய நிறுவனம் ஒன்று பொறுப்பேற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை துருக்கிய அரசாங்கம் மறுத்துள்ளது.
துருக்கிய தொழில்நுட்ப நிறுவனம்
மொத்தம் 270 பேர்களை பலிவாங்கிய இந்த துயர சம்பவம் லண்டனுக்குச் சென்று கொண்டிருந்த போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் ஒன்றில் நடந்துள்ளது. துருக்கி நிறுவன்ம் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் வகையில் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
துருக்கிய தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று விபத்துக்குள்ளான விமானத்தின் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டதாகக் கூறும் செய்திகள் முற்றிலும் தவறானவை. இந்தக் குற்றச்சாட்டுகள் தவறான தகவல்களைப் பரப்புவதற்கும் துருக்கியின் நற்பெயரையும் இந்தியாவுடனான அதன் உறவையும் சேதப்படுத்தும் முயற்சிகள் என்றும் அந்த மையம் தெளிவுபடுத்தியது.
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம், வியாழக்கிழமை பிற்பகல் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களில், அது பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி மற்றும் கேன்டீன் வளாகத்தின் மீது மோதியது.

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம்
இந்த விபத்தில் பயணி ஒருவர் உயிர் தப்பிய நிலையில், எஞ்சிய பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் மரணமடைந்தனர். விமானம் விழுந்து நெருப்பு கோளமாக மாறியதை அடுத்து அந்த இடம் விரைவாக தீப்பிடித்து எரிந்தது, கல்லூரி உள்கட்டமைப்புக்கு பெரும் சேதம் ஏற்பட்டது.
அதிகாரிகள் தரப்பு விளக்கம்
துருக்கிய அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவல்கள் அடிப்படையில், 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களின் கீழ், ஏர் இந்தியாவின் B777 விமான மாதிரிகளுக்கு மட்டுமே துருக்கிய தொழில்நுட்ப நிறுவனம் பராமரிப்பு சேவைகளை வழங்குகிறது.
விபத்துக்குள்ளான போயிங் 787-8 விமானம், அந்த ஒப்பந்தத்தின் கீழ் வராது. மட்டுமின்றி, இதுவரை, துருக்கிய தொழில்நுட்ப நிறுவனம் ஏர் இந்தியாவுக்காக எந்த B787-8 விமானத்தையும் பராமரிக்கவில்லை என்றும் அதிகாரிகள் தரப்பு விளக்கம் அளித்துள்ளனர்.
அத்துடன், விபத்துக்குள்ளான விமானத்தில் கடைசியாக பராமரிப்புப் பணிகளை எந்த நிறுவனம் மேற்கொண்டது என்பது தங்களுக்குத் தெரியும் என்றும், ஆனால் ஊகங்களைத் தடுக்க அந்தத் தகவலை வெளியிட வாய்ப்பில்லை என்றும் துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |