விபத்து தான்! உறுதி செய்த ஏர் இந்தியா விமான நிறுவனம்
விமானம் விபத்தில் சிக்கியதாக ஏர் இந்தியா நிறுவனம் உறுதி செய்துள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் விமான நிலையத்துக்கு புறப்பட்ட ஏர் இந்தியா 171 விமானம் இன்று விபத்தில் சிக்கியதை ஏர் இந்தியா உறுதிப்படுத்துகிறது.
அகமதாபாத்தில் இருந்து பிற்பகல் 13.38 மணிக்கு புறப்பட்ட போயிங் 787-8 ரக விமானத்தில் 242 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர்.
இவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பிரிட்டன், ஒரு கனடா மற்றும் 7 பேர் போர்த்துகீசிய நாட்டவர் ஆவர்.
மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது, மேலும் தகவல்களுக்கு 1800 5691 444 என்ற பிரத்யேக அவசர எண்ணை நாங்கள் அமைத்துள்ளோம்.
இச்சம்பவம் குறித்து விசாரிக்கும் அதிகாரிகளுக்கு ஏர் இந்தியா முழு ஒத்துழைப்பையும் அளிக்கிறது என கூறப்பட்டுள்ளது.