ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 274 ஆக உயர்வு
குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழப்பு உயர்வு
நேற்று முன்தினம் பிற்பகல் குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகனி நகரில் ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.
AI171 விமானமாக இயங்கும் போயிங் 78708 விமானம், இரண்டு விமானிகள் மற்றும் பத்து கேபின் பணியாளர்கள் உட்பட 242 பேரை ஏற்றிச் சென்றது.
இதில் விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர். மேலும், மருத்துவ கல்லூரியின் விடுதியின் மீது விமானம் விழுந்ததால் மருத்துவ மாணவர்கள் 10 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கட்டட இடிபாடுகளை அகற்றும் பணி தீவிரமாக அகற்றப்பட்டு வருகிறது. இடிபாடுகளில் சிக்கி மேலும் பலர் உயிரிழந்திருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், விமானத்தில் உயிரிழந்தவர்களை தவிர விபத்தில் நடைபெற்ற இடத்தில் உயிரிழந்தவர்களையும் சேர்ந்து மொத்தம் இறப்பு எண்னிக்கை 274 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், தற்போது வரை 6 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், பலரின் உடல்கள் அடையாளம் காணப்படாத வகையில் சிதைந்திருப்பதால் மரபணு சோதனை நடத்தப்படவுள்ளது.
இதனிடையே, விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து நேற்று கறுப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. அதன்படி, விபத்திற்குரிய காரணம் விரைவில் தெரியவரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |