விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த நபர்! அதிர்வலையை கிளப்பிய விவகாரத்தில் முக்கிய உத்தரவு
விமானத்தில் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் பயணம்
இந்த உத்தரவை விமான போக்குவரத்து ஆணையம் பிறப்பித்துள்ளது. நியூயோர்க்கிலிருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த சங்கர் மிஸ்ரா என்பவர், தன்னுடன் பயணம் செய்த சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்து பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டார்.
கடந்த நவம்பர் மாதம் இந்தச் சம்பவம் நடந்திருந்தாலும் சமீபத்தில்தான் இது குறித்து ஏர் இந்தியா கொடுத்த புகாரின்பேரில் பொலிசார் வழக்கு பதிவுசெய்தனர். இதையடுத்து டெல்லி பொலிசார் சங்கர் மிஸ்ராவை தேடிவந்தனர்.
indiatoday
அபராதம்
இந்த நிலையில், பெங்களூருவில் அவர் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் விரிவான விசாரணைக்கு விமானப் போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் இந்த வழக்கில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்து விமான போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அன்றைய தினம் விமானத்தை இயக்கிய விமானியின் உரிமத்தை 3 மாதத்திற்கு ரத்து செய்து ஏர் இந்தியா உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், ஏர் இந்தியாவின் இயக்குனருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்து விமானப் போக்குவரத்து ஆணையம் உத்தரவில் கூறியுள்ளது.