மீண்டும் முழங்கிய ஏர் சைரன் சத்தம்: மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தல்

Pakistan Punjab Operation Sindoor
By Arbin May 09, 2025 05:17 AM GMT
Report

வான்வழி தாக்குதல் நடத்தப்படலாம் என விமானப்படை தளத்திலிருந்து எச்சரிக்கை வந்ததைத் தொடர்ந்து இன்று காலை சண்டிகரில் மீண்டும் சைரன்கள் ஒலிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏவுகணை மற்றும் ட்ரோன்

சண்டிகர் நிர்வாகம் தங்கள் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவு செய்துள்ள தகவலில், மக்கள் குடியிருப்புக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும், மொட்டை மாடியில் இருந்து விலகியிருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மீண்டும் முழங்கிய ஏர் சைரன் சத்தம்: மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தல் | Air Sirens In Chandigarh Again

ஜம்மு-காஷ்மீரின் சில பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, நேற்று மாலை சண்டிகரில் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டன, அத்துடன் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

பஞ்சாபின் பதான்கோட்டில் ஷெல் தாக்குதல் நடந்ததாகவும் தகவல் வெளியானது. இதனிடையே, நெருக்கடியான சூழ்நிலை காரணமாக சண்டிகரில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மூடப்பட்டும் என சண்டிகர் துணை கமிஷனர் நிஷாந்த் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஜம்மு காஷ்மீரில் உள்ள ஆர்.எஸ். புரா, அர்னியா, சம்பா மற்றும் ஹிராநகர் ஆகிய இடங்களில் நேற்று மாலை பாகிஸ்தான் குறைந்தது எட்டு ஏவுகணைகளை ஏவியது. அந்த ஏவுகணைகள் அனைத்தும் ஜம்மு மீது இடைமறிக்கப்பட்டன.

15 இடங்களில்

ராஜஸ்தானின் ஜெய்சால்மர், பஞ்சாபின் அமிர்தசரஸ் மற்றும் ஹரியானாவின் பஞ்ச்குலாவிலும் மின்தடை அமுல்படுத்தப்பட்டது. இதனிடையே, மேற்கு எல்லையில் பாகிஸ்தான் ஆயுதப்படைகள் ட்ரோன்கள் மற்றும் பிற ஆயுதங்களைப் பயன்படுத்தி பல தாக்குதல்களை நடத்தியதாக இந்திய ராணுவம் இன்று காலை தெரிவித்துள்ளது.

மீண்டும் முழங்கிய ஏர் சைரன் சத்தம்: மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தல் | Air Sirens In Chandigarh Again

மட்டுமின்றி, ஜம்மு-காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் துருப்புக்கள் பல முறை போர் நிறுத்த மீறல்களை மேற்கொண்டதாகவும் ராணுவம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை இடைப்பட்ட இரவில், இந்தியா முழுவதும் 15 இடங்களில் உள்ள இராணுவ இலக்குகளைத் தாக்க பாகிஸ்தான் முயன்றது. அவந்திபோரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதன்கோட், அமிர்தசரஸ், கபுர்தலா, ஜலந்தர், லூதியானா, அடம்பூர், பதிண்டா, சண்டிகர், நல், பலோடி, உத்தரலை மற்றும் புஜ் உட்பட 15 இலக்குகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

கடந்த மாதம் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

ரங்கூன், Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

13 May, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Lausanne, Switzerland

23 Mar, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, London, United Kingdom

10 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US