சாலையோரம் நின்றிருந்த கார் மீது மோதிய விமானம்! ஜேர்மன் விமானி உட்பட இருவர் பலி
பெல்ஜியம் நாட்டில் இலகுரக விமானம் ஒன்று கார் மீது மோதிய விபத்தில் இருவர் பலியான சம்பவம் நடந்துள்ளது.
கார் மீது மோதிய விமானம்
கிழக்கு பெல்ஜியத்தில் உள்ள Aerodrome-யில் இலகுரக விமானம் ஒன்றில் இருவர் பயணித்துள்ளனர்.
விமானத்தை தரையிறக்க முயன்றபோது காற்றின் வேகத்தால் அது தோல்வியடைந்துள்ளது. இதனால் Aerodrome அருகே சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது விமானம் பயங்கரமாக மோதியது.
இதில் இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எறிந்ததில், விமானத்தில் சென்ற இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உயிர்பிழைத்த நபர்
காரை நிறுத்தியிருந்த நபர் அச்சமயம் புகைபிடிக்க சென்றதால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார்.
இந்த விபத்து குறித்து விசாரணையை தொடங்கியுள்ள பொலிஸ் அதிகாரிகள், உயிரிழந்த விமானி ஜேர்மனியைச் சேர்ந்தவர் என்று தெரிவித்துள்ளனர்.
Belga Photo Romain Rixhon
ஆனால் பயணியின் குடியுரிமை குறித்து விசாரணை நடந்து வருவதாக கூறிய அவர்கள், விமான விபத்து தோல்வியுற்ற தரையிறக்கம் என்று தெரிகிறது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |