விவாகரத்துக்கு பின்னர் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட தனுஷ்- ஐஸ்வர்யா? என்ன நடந்தது தெரியுமா?
18 வருட திருமண வாழ்வை முறித்துக் கொண்டதாக அறிவித்தனர் தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதியினர்.
இத்தகவல் அவர்களது ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் அவர்களது குடும்பத்தினர் ஈடுபட்டாலும் தோல்வியே கிடைத்ததாம்.
இருவரும் பிரிந்ததற்கு பல காரணங்கள் கூறப்பட்டது, இந்நிலையில் சென்னையில் இருவருக்கும் நெருக்கமான ஒருவரின் விருந்து நிகழ்ச்சியில் தனுஷ்- ஐஸ்வர்யா கலந்து கொண்டுள்ளனர்.
எனினும் ஒருவரையொருவர் கண்டுகொள்ளாமல் யாரோ ஒருவர் போன்று நடந்து கொண்டதாக தெரிகிறது.
நிகழ்ச்சியில் நேருக்குநேர் பார்த்தால் கூட பேசுவார்கள் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தாலும் ஏமாற்றமே மிஞ்சியதாம்.