மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! என்ன நடந்தது?
கொரோனா தொற்றிலிருந்து மீண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விவாகரத்து அறிவிப்புக்கு பின்னர் தன்னுடைய வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தார், இந்நிலையில் காய்ச்சல் மற்றும் தலைச்சுற்றலால் அவதிப்பட்ட ஐஸ்வர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட, சீக்கிரம் நலம்பெற்று வரவேண்டுமென பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கிடையே தனுஷின் அண்ணியான கீதாஞ்சலியும், ஐஸ்வர்யா மீண்டுவரவேண்டுமென பதிவிட்டுள்ளார்.