ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடியது ஏன்? பணிப்பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்

Rajinikanth Aishwarya Rajinikanth Tamil nadu Crime Soundarya Rajinikanth
By Thiru Mar 28, 2023 05:35 AM GMT
Report

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடப்பட்ட நகைகள் தொடர்பாக திருமண ஆல்பத்தை வைத்து பொலிஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், மாடாக உழைத்தும் உரிய சம்பளம் கொடுக்காததால் திருடினேன் என்று பணிப்பெண் ஈஸ்வரி வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருட்டு

 நடிகர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய வீட்டில் இருந்து 60 சவரன் நகைகளை காணவில்லை என்று காவல் துறையிடம் கடந்த 10ம் திகதி புகார் அளித்ததுடன், வீட்டில் பணிபுரியும் பணிப்பெண்கள் ஈஸ்வரி, லட்சுமி, ஈஸ்வரியின் கணவர் உமாபதி ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாகவும் புகாரில் தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து பொலிஸார் நடத்திய விசாரணையில் பணிப்பெண் ஈஸ்வரி, ஓட்டுநர் வெங்கட்டுடன் சேர்ந்து கடந்த 4 ஆண்டுகளாக சிறுக சிறுக ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லாக்கரில் இருந்து நகைகளை திருடி உள்ளார் என்பது தெரியவந்தது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடியது ஏன்? பணிப்பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம் | Aishwarya Rajinikanth Jewel Theft Eshwari Confess

அத்துடன் திருடிய நகைகளை நகைக் கடைகளில் விற்பனை செய்து, அந்தப் பணத்தில் சென்னை சோழிங்கநல்லூரில் 1 கோடி ரூபாய் மதிப்பில் பணிப்பெண் ஈஸ்வரி வீடு வாங்கியதும் விசாரணையில் அம்பலமானது.

திருமண ஆல்பத்தை வைத்து விசாரணை

வீட்டில் இருந்து 60 சவரன் நகைகளை காணவில்லை என்று கூறினாரே தவிர, அதில் வைரத்தின் மதிப்பு என்ன? எத்தனை கிலோ வெள்ளி பொருட்கள் இருந்தது என்பது குறித்து ஐஸ்வர்யா கூறவில்லை.

ஆனால் பொலிஸார் பணிப்பெண் ஈஸ்வரியின் வீட்டை சோதனையிட்ட போது 100 சவரன் நகை, 30 கிராம் வைரம், 4 கிலோ வெள்ளி என மொத்தம் 3 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடியது ஏன்? பணிப்பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம் | Aishwarya Rajinikanth Jewel Theft Eshwari Confess

இதற்கிடையில் எந்தெந்த நகைகள் திருடப்பட்டது என்று ஐஸ்வர்யாவால் தெளிவாக கூற முடியவில்லை, காரணம் அவர் அந்த நகைகளை இறுதியாக தங்கை சௌந்தர்யாவின் திருமணத்தின் போது அணிந்துவிட்டு லாக்கரில் வைத்ததாகவும், அதன் பின் அந்த நகைகளை எடுத்து பார்க்கவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

பொதுவாக திருட்டு போன நகைகளின் ரசீதை வைத்து பொலிஸார் விசாரணை நடத்துவார்கள், ஆனால் எந்தெந்த நகைகள் திருட்டு போனது என்ற திட்டம் ஐஸ்வர்யாவிடம் இல்லாததால், தங்கையின் சவுந்தர்யாவின் திருமண ஆல்பத்தை வைத்து அதில் ஐஸ்வர்யா அணிந்து இருந்த நகைகளை ஒப்பிட்டு காணாமல் போன நகைகளை பொலிஸார் மதிப்பிட்டு வருகின்றனர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடியது ஏன்? பணிப்பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம் | Aishwarya Rajinikanth Jewel Theft Eshwari Confess

உரிய சம்பளம் கொடுக்காததால் திருடினேன்

ஐஸ்வர்யா வீட்டில் நடந்துள்ள இந்த நகை திருட்டு சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,  தான் ஏன் திருட்டு வேலையில் ஈடுபட்டேன் என்பது குறித்து பணிப்பெண் ஈஸ்வரி பரபரப்பு வாக்குமூலம் வெளியிட்டுள்ளார்.

அதில் தனக்கு 30 ஆயிரம் தான் சம்பளம் கொடுப்பதாகாவும், அந்த பணம் தனது குடும்பத்திற்கு போதவில்லை எனவே சின்ன திருட்டு வேலைகளை செய்து வந்ததாகவும், அதை அவர்கள் கவனிக்காததால் பெரிய திருட்டில் இறங்கியதாவும் பணிப்பெண் ஈஸ்வரி கூறியுள்ளார். 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடியது ஏன்? பணிப்பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம் | Aishwarya Rajinikanth Jewel Theft Eshwari ConfessAishwarya Rajinikanth with her father Rajinikanth

மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US