ஒட்டு மொத்த இந்தியாவையும் அவுட் ஆக்கிய நியூசிலாந்து வீரர்! தேடிச் சென்று வாழ்த்திய கோஹ்லி-டிராவிட்
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஜாஸ் பட்டேல் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 352 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 150 ஓட்டங்கள் குவித்தார்.
இப்போட்டியில், இந்திய அணியின் முதல் இன்னிங்ஸின் அனைத்து விக்கெட்டுகளையும், நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஜாஸ் படேல் வீழ்த்தி, உலக சாதனை படைத்தார். உலக அளவில் இந்த சாதனையை படைத்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
— Addicric (@addicric) December 4, 2021
47.5 ஓவர் வீசி 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய அஜாஸ் பட்டேல், 119 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்தார். இந்தியாவை சேர்ந்த நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல், மும்பை வாங்க்டே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், அவர் இந்த சாதனையை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான அனில் கும்ப்ளே கடந்த 1999-ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் பத்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன் பின் இங்கிலாந்து வீரர் ஜிம்லோக்கர் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்திருந்தார். இப்படி இந்தியாவின் ஒட்டு மொத்த பேட்ஸ்மேன்களை வீழ்த்திய அஜாஸ் பட்டேலை, உடனடியாக அவர் இருக்கும் இடத்திற்கு சென்று கோஹ்லி மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் வாழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.