சர்வதேச கிரிக்கெட் தடையில் இருந்து தப்பினார் இந்திய வீரர் அஸ்வின்! பணம் தான் முக்கியம்... பிரபல வீரர் திடுக் குற்றச்சாட்டு
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் அஸ்வினுக்கு விதிக்கப்படவிருந்த தடையில் இருந்து அவர் தப்பிவிட்டார் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் சயீத் அஜ்மல் திடுக் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்
இது குறித்து சயீத் அஜ்மல் அளித்த பேட்டியில், கிரிக்கெட்டின் விதிமுறைகளை யாரைக் கேட்டு அடிக்கடி மாற்றுகிறார்கள் எனத் தெரியவில்லை.
நான் கடந்த 8 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடுகிறேன். ஆனால் அனைத்து விதிமுறைகளும் என் மீதே விழுந்தது. அந்தக் காலக்கட்டத்தில் அஸ்வின் ஏன் 6 மாதக்காலம் விளையாடாமல் இருந்தார்? அப்போது அவருக்கு உதவி அளிக்கப்பட்டது.
அவருடைய பவுலிங் போடும் முறை மாற்றப்பட்டது. அதனால் ஐசிசியின் தடையில் இருந்து அவர் தப்பித்தார். ஆனால் பாகிஸ்தான் வீரர்களை பற்றி யாருக்கும் கவலையில்லை. அவர்களுக்கு பணம்தான் முக்கியம் என கூறியுள்ளார்.
சுழற்பந்துவீச்சாளராக சிறப்பாக செயல்பட்ட சயீத் அஜ்மலின் பவுலிங் ஆக்ஷன் கிரிக்கெட் விதிமுறைகளுக்கு எதிரானது எனக் கூறி சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட தடை விதிக்கப்பட்டது.
இதனையடுத்து அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.