இவ்வாண்டுக்கான க.பொ.த உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளை பிற்போடுவது தொடர்பில் வெளிவந்துள்ள விடயம்
கோவிட் - 19 தொற்று நிலைமை காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமையால் 2021 க.பொ.த உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்துவதில் தாமதம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலைமை தொடர்பில் சுகாதாரத் தரப்பினர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து கலந்துரையாடல்களை நடத்தி பரீட்சையை நடத்தும் தினம் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கோவிட் தொற்று நிலைமை காரணமாக 2020 க.பொ.த சாதாரணதர பரீட்சையில் ஆங்கில மொழி வினாத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்கு இடையூறும் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.