சீறி வரும் காளைகள்! மல்லுகட்டும் காளையர்கள்... உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேரலை வீடியோ
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலக அளவில் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு விழா, வருடந்தோறும் தை 3ம் திகதி நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த முறை தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கிறது..
லாக்டவுனும் அமலில் உள்ளது.. அதனால், ஜல்லிக்கட்டு இன்று நடக்கிறது. அலங்காநல்லூர் ஜல்லிகட்டிற்காக இந்த ஆண்டு முதல்முறையாக ஆன்லைன் மூலமாகவே ஜல்லிக்கட்டு காளைகளும், மாடுபிடி வீரர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.. அதன்படி, 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் முன்பதிவு செய்யப்பட்டன.
ஆனால், பார்வையாளர்கள் 150பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது... இந்த ஜல்லிக்கட்டு போட்டியை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தனர். களமிறங்கும் காளைகள் மற்றும் வீரர்களுக்கு தலா ஒரு தங்ககாசு பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதைவிட முக்கியம், இந்த போட்டியில் தேர்வு செய்யப்படும் சிறந்த காளைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் தங்க காசும், புதிய கார் ஒன்றும் வழங்கப்படவுள்ளது.
அதுமட்டுமல்ல, சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் மாடுகளை அடக்கும் மாடுபிடி வீரருக்கு தங்க காசும் பரிசாக வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்திருக்கிறார்.
வீரர்கள் காளைகளை அடக்கி வருகின்றனர்.
அதன் நேரலை வீடியோ