12th கூட முடிக்கவில்லை.., பல கோடி சொத்துமதிப்பு கொண்ட பிரபல நடிகை: யார் தெரியுமா?
திரையுலகில் வெற்றிகரமாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றவர் இந்தி நடிகை ஆலியா பட்.
இயக்குநர் மகேஷ் பட்டின் மகளான ஆலியா பட், பாலிவுட்டில் கரண் ஜோகரின் திரைப்படத்தில் அறிமுகம் ஆனார்.
முதல் படத்திலேயே நல்ல நடிகை என்ற பாராட்டை பெற்ற ஆலியா பட், தற்போது பல விருதுகளை வென்றுள்ளார்.
ஆனால், அவர் 12ஆம் வகுப்பை கூட முடிக்கவில்லை என்பது பலருக்கும் தெரிந்திடாத ஒன்று.
பள்ளிப் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு, நடிப்பதற்கு வந்த ஆலியா பட்டுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்ததால் பல படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் ரன்பீர் கபூரை மணந்த ஆலியா பட்டுக்கு ராஹா கபூர் என்ற பெண் குழந்தை இருக்கிறது.
பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக வலம் வரும் ஆலியா பட், தொடர்ந்து திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார்.
இவர் நடிக்கும் படங்களைப் போலவே, இவர் தயாரிக்கும் திரைப்படங்களும் ஹிட் ஆகின்றன.
விலையுயர்ந்த வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை வைத்துள்ள ஆலியா பட், பல தொழில்களையும் செய்து வருகிறார்.
இதனால், இவர் பல ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரராக இருக்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |