பெண்கள் ஏன் காலில் மெட்டி அணிய வேண்டும் தெரியுமா?
ஒரு பெண்ணுக்கு பெருமையும் மங்கலமும் தரக்கூடிய அணிகலங்களுள் முக்கியமான ஒன்றாக மெட்டி விளங்குகின்றது.
திருமணம் ஆனதும் கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில் பெண்கள் மெட்டி அணிவார்கள்.
அந்த விரலில் மட்டும் தான் மெட்டி அணிய வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லி வைத்தற்கு ஒரு காரணமும் உண்டு.
ஏன் அந்த விரலில் மெட்டி அணிய வேண்டும்?
கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில் தான் கருப்பையின் நரம்பு நுனிகள் வந்து முடிகின்றன. இம்மெட்டி நடக்கும் போது அழுத்தப்படுவதால் கருப்பை வளர்ச்சிக்கு இந்த அழுத்தம் பெரிதும் உதவுகின்றது, அதனால்தான் திருமணத்தில் பெண்கள் காலில் மெட்டியை அணிகின்றனர்.
ஒரு பெண் திருமணமானவர் என்பதை உணர்த்துவது அவர் கால் விரல்களில் அணிந்திருக்கும் மெட்டி.
மேலும் கர்ப்பத்தின் போது ஏற்படும் வாந்தி மற்றும் தலைவலியில் இருந்து பாதுகாக்கும்.
மெட்டி ஏன் வெள்ளியில் அணிய வேண்டும்?
வெள்ளியில் மெட்டி அணிவதால் வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்த சக்தி கால் நரம்புகளில் சென்று நோய்களை தடுக்கும் என்று கருதப்படுகின்றது.
மெட்டி தேய்ந்த உடன் ஒரு சில பெண்கள் அதை எறிந்துவிடுவார்கள். அப்படி செய்யாமல் அதை உருக்கி எடுத்து மறுபடியும் செய்து அணிந்துக்கொள்ள வேண்டும்.
ஆண்களை விடவும் பெண்களுக்கு காமம் அதிகம். ஆகவே அதை கட்டுப்படுத்தும் வகையிலும் இதை அணிகின்றார்கள்.
தற்போது பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் மெட்டி அணிந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.