எரிபொருள் இல்லாமல் பல மாதங்கள் பறக்கும் விமானம் - பெங்களூரு ஸ்டார்ட்அப் Alteon புதிய சாதனை
Alteons fuel-free aircraft stays airborne for months: எரிபொருள் இல்லாமல் பல மாதங்கள் பறக்கும் விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Alteon ஸ்டார்ட்அப் நிறுவனம்
பெங்களூருவைச் சேர்ந்த இளம் தொழில்முனைவோர் சமய் சங்க்வி (20 வயது) நிறுவிய Alteon என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், உலகளாவிய விமானத் துறையில் புரட்சிகரமான முயற்சியை மேற்கொண்டுள்ளது.
எரிபொருள் இல்லாமல், பல மாதங்கள் வானில் பறக்கக்கூடிய autonomous விமானம் உருவாக்கும் பணியில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

அல்பட்ராஸ் பறவை பறக்கும் முறை
இந்த விமானம், அல்பட்ராஸ் பறவை பறக்கும் முறையைப் பின்பற்றுகிறது. அல்பட்ராஸ் தினமும் 800-1000 கிலோமீட்டர் தூரம், இறக்கைகள் அசைக்காமல், Dynamic Soaring எனப்படும் தொழில்நுட்பத்தின் மூலம் பறக்கிறது.
இதே முறையை பயன்படுத்தி, Alteon விமானம் கடலின் மேல் காற்றின் வேக வேறுபாடுகளை (wind gradients) பயன்படுத்தி, எரிபொருள் தேவையின்றி பறக்கிறது.
At Alteon, we are building planes that fly for more than a year without landing. Ones that would take off in 2026 and land in 2027.
— Samay Sanghvi (@samaysanghvi) September 1, 2026
We’ve raised a $2.5M pre-seed, led by @lachygroom, with participation from @shubg at @scaletogether.
We do this using a flight technique called… pic.twitter.com/OdcT9VV9Gs
சாதனை
2026 ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற சோதனையில், Alteon விமானம் கடலின் மேற்பரப்பில் ஒரு மீட்டர் உயரத்தில், autonomous முறையில் பல முறை சுற்றி பறந்தது.
இந்த சாதனை, நிறுவனத்திற்கு 2.5 மில்லியன் டொலர் முதலீட்டை ஈட்டித் தந்தது. இந்த விமானம், கடல்களை தொடர்ந்து கண்காணிப்பதற்கான மிகச் சிறந்த தீர்வாகக் கருதப்படுகிறது.
கப்பல்கள் அல்லது செயற்கைக்கோள்களை விட மிகக் குறைந்த செலவில், நீண்ட காலம் கடலின் நிலையைப் பதிவு செய்யும் திறன் இதற்கு உள்ளது.

Alteon நிறுவனம், எதிர்காலத்தில் இந்த விமானங்களை கடல் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் ஆய்வு, மீன்பிடி கண்காணிப்பு, மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான ஆராய்ச்சிகளில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
சமய் சங்க்வி கூறியதாவது: “விமானங்கள் எப்போதும் தரையிறங்க வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால், எங்கள் தொழில்நுட்பம் அதை மாற்றுகிறது. எரிபொருள் இல்லாமல், மாதக்கணக்கில் பறக்கும் விமானம் உலகளாவிய கண்காணிப்பில் புதிய யுகத்தைத் தொடங்கும்.” என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |