ஆஸ்துமா உங்களை வாட்டி வதைக்குதா? இதனை போக்க இந்த அற்புதமான கஷாயத்தை குடிங்க போதும்
ஆஸ்துமா தற்போது வயது வித்யாசமின்றி எல்லாரையும் தாக்கி அச்சுறுத்தும் நோயாக இருக்கிறது. உணவு, உடை, தூசு, புகை, புகைபிடித்தல், தொழிற்சாலைக் கழிவுகள் போன்றவை ஒவ்வாமையைத் தூண்டும்போது ஆஸ்துமா வருகிறது.
ஆஸ்துமாவை முழுவதுமாகக் குணப்படுத்த முடியாது. இதைக் கட்டுப்படுத்தவே வழிகள் உள்ளன. இதற்கு மாத்திரை மருந்துகள் எதுவும் தேவையில்லை. வீட்டில் இருக்கும் சமையல் அறை பொருட்களை கொண்டு எளிதில் செய்ய முடியும்.
அதற்கு கருப்பு ஏலாக்காய் பெரிதும் உதவி புரிகின்றது. இதில் கசாயம் செய்து குடித்து வர நல்ல பயனை காணலாம். தற்போது இந்த கசாயத்தை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- கிராம்பு - 2
- கருப்பு ஏலக்காய் -4-5
- இஞ்சி (துருவியது) - 1 டீ ஸ்பூன்
- துளிசி இலைகள் - 5-6
- தண்ணீர் - 3-4 கப்
தயாரிக்கும் முறை
மேலே குறிப்பிட்டுள்ள மசாலா பொருட்களை ஒரு கடாயில் போட்டு வதக்குங்கள், இப்போது கடாயில் தண்ணீர் ஊற்றி இஞ்சி சேர்த்து கொதிக்க விடவும்.
பிறகு துளிசி இலைகளை போட்டு 4-5 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைக்கவும். பிறகு அடுப்பை அணைத்து விட்டு ஒரு கப்பில் தண்ணீரை மட்டும் வடிகட்டி கொள்ளவும்.
தண்ணீர் பாதியாக வற்றும் வரை காய்ச்ச வேண்டும். இது ஆஸ்துமாவின் தீவிரத்தை குறைக்க பயன்படுகிறது.
முற்றிலும் குணப்படுத்தாவிட்டாலும் ஆஸ்துமாவின் பாதிப்பை பெருமளவு குறைக்க உதவுகிறது.