சி.இ.ஓ. பதவியிலிருந்து விலகியதும், தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றவுள்ள அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்!
அமேசான் நிறுவன சி.இ.ஓ., ஜெப் பெசோஸ் தனது புளு ஆர்ஜின் நிறுவன ராக்கெட் மூலம் ஜூலை 20 தேதி விண்வெளிக்கு பறக்கவுள்ளார்.
அமெரிக்க நிறுவனமான அமேசான் என்ற 'ஓன்லைன்' வர்த்தக நிறுவனத்தை 1994-ஆம் ஆண்டு துவக்கியவர் ஜெப் பெசோஸ் (55).
அந்நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி தற்போது உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.
அவர் தனது சிறுவயதில் விண்வெளி பயணம் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 2000-ஆம் ஆண்டு “ப்ளு ஆர்ஜின்” என விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தையும் துவக்கினார். 2015-ஆம் ஆண்டு ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் நியூ ஷெப்பர்ட் என்ற ராக்கெட்டை வெற்றிக்கரமாக விண்வெளிக்கு செலுத்தியது.
இதற்கிடையில், வரும் ஜூலை முதல் வாரம் அமேசான் சி.இ.ஓ., பொறுப்பிலிருந்து ஜெப் பெசோஸ் விலகப்போவதாக கடந்த பிப்ரவரி மாதம் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் வரும் ஜூலை 20-ஆம் திகதி புளூ ஆர்ஜின் நிறுவன ராக்கெட் மூலம், விண்வெளிக்கு பறக்க திட்டமிட்டுள்ளதாக ஜெப் பெசோஸ் தனது டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊரடங்களில் தெரிவித்துள்ளார்.
அவர் தனது பதிவில், "எனது ஐந்து வயதிலிருந்தே, விண்வெளிக்கு பயணம் செய்ய வேண்டும் என்று கனவு கண்டேன். ஜூலை 20 ஆம் திகதி, நான் எனது சகோதரருடன் அந்த பயணத்தை மேற்கொள்வேன். எனது சிறந்த நண்பருடன்இது எனது மிகப் பெரிய சாகசமாக இருக்கப்போகிறது" என கூறியுள்ளார்.