கொரோனா வைரஸை பரப்பியது சீனாவா? எங்களிடம் பக்கா ஆதாரம் இருக்கு.. நெஞ்சை நிமிர்த்தி சொல்லும் அமெரிக்கா!
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19.5 கோடியை தாண்டியுள்ளது.
சுமார் ஒன்றரை ஆண்டுகளாக எந்த ஒரு பாரபட்சமும் பார்க்காமல் உலகம் முழுவதும் கொரோனா நோய் தாக்கி வருகின்றது.
கொரோனா இரண்டாவது அலை கொடூரமாக தாக்கி கட்டுக்குள் வந்த நிலையில் மூன்றாவது அலை குறித்து எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க குடியரசு கட்சியின் பார்லி கொரோனா வைரஸ் குறித்து முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அதில், கொரோனா வைரஸை சீனா பரப்பவில்லை. கொரோனாவை பரப்பியது உகான் வைரஸ் ஆய்வு கூடத்தின் உள்ள விஞ்ஞானிகள் என்று தெளிவாக கூறியுள்ளார்.
மனிதனை தாக்கும் கொடிய வைரஸை ஏவிவிட்டு அதை வெளியே தெரியாமல் மறைக்க பல தில்லு முல்லு வேலைகளை செய்துள்ளனர்.
2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் தேதிக்கு முன்பாகவே உகான் ஆய்வுக் கூடத்திலிருந்து ரகசியங்கள் வெளியே கசிந்துள்ளதாக அறிவிக்கையில் வெளியிட்டுள்ளார்.