ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி பெற்றுக்கொண்ட அமெரிக்க பெண் உயிரிழப்பு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆனது
அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி பெற்றுக்கொண்ட மற்றொரு பெண் உயிரிழந்துள்ளார்.
Oregonஐச் சேர்ந்த அந்த 50 வயது பெண்ணுடன் சேர்த்து, ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி பெற்றுக்கொண்டபின் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆகியுள்ளது.
இதற்கு முன் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி பெற்றுக்கொண்டபின் உயிரிழந்த ஆறு பெண்கள் 18 முதல் 50 வயதுடையவர்கள் ஆவர். ஒரு பெண் 60 வயதுக்குட்பட்டவர்.
அவர்கள் அனைவருக்குமே மூளையில் இரத்தக்கட்டிகள் உருவானதோடு, இரத்தத்தட்டுகள் குறைபாடும் கண்டறியப்பட்டது.
இந்நிலையில், Oregonஐச் சேர்ந்த அந்த 50 வயது பெண் தடுப்பூசி பெற்றுக்கொண்டு இரண்டு வாரங்களுக்குள் இரத்தக்கட்டிகள் உருவாகி உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.