இஸ்ரேலுடன் ட்ரம்பின் ஈரான் போரை அமெரிக்கர்கள் ஆதரிக்கிறார்களா? வெளியான உண்மை நிலவரம்
இஸ்ரேலுடன் இணைந்து ட்ரம்ப் முன்னெடுக்கும் ஈரான் போரை வெறும் 27 சதவீதம் அமெரிக்க மக்கள் மட்டுமே ஆதரிப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மிகவும் அவசரப்படுவதாக
ஞாயிறன்று வெளியான ராய்ட்டர்ஸ்/இப்சோஸ் கருத்துக்கணிப்பில், ஈரான் போரை 43 சதவீத அமெரிக்க மக்கள் விரும்பவில்லை என்றும் 29 சதவீத மக்கள் முடிவு செய்யவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

மட்டுமின்றி, அமெரிக்க நலன்களை மீறி இராணுவ பலத்தைப் பயன்படுத்த ஜனாதிபதி மிகவும் அவசரப்படுவதாக அமெரிக்கர்களில் பாதி பேர் நம்புவதாகவும் கருத்துக் கணிப்பு கண்டறிந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 56 சதவீதம் பேர், தேவையில்லாமல் இராணுவ பலத்தை பயன்படுத்த ட்ரம்ப் தயாராக இருப்பதாக கூறியுள்ளனர்.
பெரும்பான்மையான ஜனநாயகக் கட்சியினர் - 83 சதவீதம் பேர் - ட்ரம்ப் இராணுவ நடவடிக்கையை எடுக்க மிக அவசரப்படுகிறார் என தெரிவித்துள்ளனர்.
ஆனால் குடியரசுக்கட்சியினர் 23 சதவீதம் பேர்கள் மட்டுமே ட்ரம்ப் அவசரப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர். இரு கட்சியிலும் சாராதவர்கள் 60 சதவீதத்தினர் ட்ரம்ப் அவசரம் காட்டுவதை ஒப்புக்கொண்டுள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள 1282 அமெரிக்கர்கள் பதிலளித்துள்ள இந்த கருத்துக்கணிப்பில், பத்தில் ஒன்பது பேர் ஈரான் போர் பற்றி குறைந்தபட்சம் சிறிதளவு கேள்விப்பட்டதாகக் கூறினர்.
4 வாரங்கள் வரையில்
சனிக்கிழமை அதிகாலை முன்னெடுக்கப்பட்ட இந்தப் போரில் இதுவரை 3 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், 500க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், ட்ரம்ப் நிர்வாகம் மூடி மறைக்கிறது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
இந்த நிலையில், தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டால், ஈரான் போரானது 4 வாரங்கள் வரையில் நீடிக்கும் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் போரை நாடாளுமன்றத்தில் குடியரசு கட்சியினர் வரவேற்றிருந்தாலும், ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க துருப்புக்களின் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் குறித்த செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, தாக்குதல்களுக்காக ட்ரம்ப் நிர்வாகம் தற்போது அதிகரித்த நெருக்கடியை எதிர்கொள்கிறது.

மத்திய கிழக்கில் இராணுவ மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக நீண்டகால ட்ரம்ப் ஆதரவாளர்கள் தற்போது அவரைக் குறை கூறுகின்றனர்.
தேர்தல் பரப்புரைகளில் போர்களுக்கு எதிராக பேசி மக்கள் ஆதரவைத் திரட்டி வென்றதன் பின்னர் தற்போது, பல நாடுகளில் ஆட்சி மாற்றங்களை முன்னெடுப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
எப்ஸ்டீன் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்க இன்னொரு நாடு மீது குண்டு வீசுவதால் எந்த பயனும் இருக்கப் போவதில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாடியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |