நோயெதிர்ப்பு சக்தியை ஆச்சரியமளிக்கும் வகையில் அதிகரிக்க இந்த ஒரு சக்திவாய்ந்த பானம் போதும்...!
கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் இந்தவேளையில் நாம் பாதுகாப்புடன் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி கொண்டே உள்ளனர்.
வைரஸ் பரவி வரும் இந்த நேரத்தில் முதலில் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதும், நமது ஆரோக்கியத்தை நல்ல நிலையில் வைத்திருப்பதும் முக்கியமானது.
அதிலும் நமது நோயெதிர்ப்பு சக்தியை இறுக்கமாகவும் இறுக்கமாகவும் வைத்திருக்க வைட்டமின் சி நிறைந்த உணவுகளை நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமானது ஆகும்.
அந்தவகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சக்தி வாய்ந்த பானம் ஒன்றை பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
அரை ஸ்பூன் முருங்கை பவுடர் அல்லது 5 முதல் 10 முருங்கை இலைகள், ஒரு முழு நெல்லிக்காய் மற்றும் அரை கிளாஸ் தண்ணீர் போதுமானது.
நன்மை
-
வைட்டமின் சி அதிகமிருக்கும் பொருட்களில் நெல்லிக்காய் முக்கியமான ஒன்றாகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
-
முருங்கை மர இலைகள் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த மூலமாகும். நெல்லிக்காயுடன் இணையும் போது இது நம் உடலில் இரும்பு உறிஞ்சுதலை அதிகரிக்கிறது.
- இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
உங்களுக்கு முருங்கை இலைகள் கிடைக்கா விட்டால், அவற்றை புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளால் மாற்றலாம்.