1.2 மில்லியன் அகதிகளை நாட்டுக்குள் வரவேற்ற முன்னாள் ஜேர்மன் சேன்சலருக்கு கிடைத்துள்ள கௌரவம்...
ஜேர்மனியின் முன்னாள் சேன்சலரான ஏஞ்சலா மெர்க்கலுக்கு ஐ.நா. அகதிகள் ஏஜன்சி உயரிய விருதொன்றை வழங்கி கௌரவித்துள்ளது.
அவர் ஜேர்மனியின் சேன்சலராக பதவி வகிக்கும்போது, 1.2 மில்லியனுக்கும் அதிகமான அகதிகள் ஜேர்மனிக்குள் வரவேற்கப்பட்டார்கள்.
ஜேர்மனியின் முன்னாள் சேன்சலரான ஏஞ்சலா மெர்க்கலுக்கு ஐ.நா. அகதிகள் ஏஜன்சி உயரிய விருதொன்றை வழங்கி கௌரவித்துள்ளது.
மெர்க்கல் ஜேர்மனியின் சேன்சலராக பதவி வகிக்கும்போது, 1.2 மில்லியனுக்கும் அதிகமான அகதிகளையும், புகலிடக்கோரிக்கையாளர்களையும் இருகரம் நீட்டி வரவேற்றது ஜேர்மனி.
Nansen Prize என்னும் அந்த விருது மெர்க்கலுக்கு வழங்கப்படுவதாக ஐ.நா. அகதிகள் ஏஜன்சி செவ்வாயன்று அறிவித்தது.
Copyright Credit: AP Photo
ஏராளம் அகதிகளை நாட்டுக்குள் வர விட்டதற்காக எதிர்ப்பையும் சம்பாதித்தார் மெர்க்கல். 2015 -16 அகதிகள் பிரச்சினை உச்சத்திலிருந்தபோது, பல ஐரோப்பிய நாடுகள் தங்கள் எல்லைகளை மூடிவிட்டன. ஆனால், ஜேர்மனி மட்டும் அகதிகளுக்கு தன் எல்லைகளைத் திறந்துவிட்டதற்காக சில நாடுகள் அவரை கடுமையாக விமர்சித்தன.
மெர்க்கலுக்கு வழங்கப்படும் விருதுடன் அவருக்கு 151,000 யூரோக்களும் வழங்கப்படும். இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி, இம்மாதம் 10ஆம் திகதி, சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் வைத்து நடைபெற உள்ளது.