இந்த நாள் ஜேர்மனியின் வரலாற்றில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாள் தெரியுமா?
நவம்பர் 9ஆம் திகதி, ஜேர்மன் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் பல நிகழ்ந்த நாளாகும்.
அவற்றில் ஒன்று பெர்லின் சுவர் இடிக்கப்பட்ட நிகழ்வாகும்.
நவம்பர் 9, ஜேர்மனியின் விதியின் நாள் என அழைக்கப்படுகிறது. அதற்குக் காரணம், அந்த நாளில் ஜேர்மன் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் பல நிகழ்ந்துள்ளன.
1918: ஜேர்மனியின் கடைசி மன்னர் பதவியிலிருந்து நீக்கம்
Photo: DPA
ஜேர்மனியின் கடைசி மன்னரான Kaiser Wilhelm II பதவியிலிருந்து இறக்கப்பட்டு, மன்னராட்சி முடிவுக்கு வந்த நாள், நவம்பர் 9, 1918.
1923: ஹிட்லரின் பியர் ஹால் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி
Photo: DPA
அப்போது பிரபலமாகாத நாஸி கட்சியின் தலைவராக இருந்த ஹிட்லர், முதன்முறையாக ஆட்சியைக் கவிழ்க்க முயன்று, பிடிபட்டு சிறையிலடைக்கப்பட்ட நாள், நவம்பர் 9, 1923. Munichஇலுள்ள பியர் விடுதி ஒன்றில்தான் ஹிட்லரும் அவரது கூட்டாளிகளும் அந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியைத் துவக்கினார்கள். அதற்குப் பிறகுதான் அவர் பிரபலமானார். ஒரு நாள் ஜேர்மனியின் சேன்ஸலரும் ஆனார்.
1938: உடைந்த கண்ணாடிகளின் இரவு
Photo: Bundesarchiv / Wikimedia Commons
1938ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 9ஆம் திகதி, Night of Broken Glass என அழைக்கப்படுகிறது. அன்று, நாஸிக்கள் யூத தேவாலயங்களை தீவைத்துக் கொளுத்தி, யூதர்களுக்குச் சொந்தமான கடைகளின் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கி, யூதர்கள் மீது தாக்குதல் நடத்திய நாள்.
1989: பெர்லின் சுவர் வீழ்ந்த நாள்
Photo: DPA
கத்தியின்றி இரத்தமின்றி நடந்த புரட்சியின் விளைவாக 1989ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 9ஆம் திகதி பெர்லின் சுவர் வீழ்ந்தது.
ஆனாலும், நவம்பர் 9ஆம் திகதி ஜேர்மனியில் பல மோசமான நிகழ்வுகள் நிகழ்ந்த நாள் என்பதால், ஜேர்மானியர்கள் நவம்பர் 9ஆம் திகதிக்கு பதிலாக, நவம்பர் 3ஆம் திகதியைத்தான் கிழக்கு ஜேர்மனியும் மேற்கு ஜேர்மனியும் இணைந்த நாளாக கொண்டாடுகிறார்கள்.