ஜேர்மன் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட இந்திய முதல்வர் ஒருவர்: பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தகவல்
பஞ்சாப் மாநில முதல்வர் ஜேர்மன் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
அந்த தகவலை Bhagwant Mannஇன் ஆம் ஆத்மி கட்சி மறுத்துள்ளது.
இந்தியாவின் பஞ்சாப் மாநில முதல்வர், ஜேர்மன் விமானம் ஒன்றிலிருந்து இறக்கிவிடப்பட்டதாக ஒரு செய்தி வெளியாகி சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
எட்டு நாள் அரசுமுறைப் பயணமாக ஜேர்மனிக்குச் சென்றிருந்தார் பஞ்சாப் முதல்வரான Bhagwant Mann.
அவர் இந்தியா திரும்புவதில் தாமதம் ஏற்பட்டதாகவும், அதற்குக் காரணம், குடிபோதையில் இருந்த அவர் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டதாகவும் தகவல்கள் பரவின.
Image: Sentinal Assam
ஆனால், அந்த தகவலை Bhagwant Mann சார்ந்த ஆம் ஆத்மி கட்சி மறுத்துள்ளது.
முதல்வரின் நற்பெயருக்கு களங்க விளைவிப்பதற்காக இப்படி எதிர்க்கட்சியினர் புரளிகளைக் கிளப்பிவிடுவதாக தெரிவித்துள்ளார் அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர்.
இதற்கிடையில், முதல்வருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், அதனால் அவர் விமானத்தில் ஏறவில்லை என்றும் பஞ்சாப் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.