அவ்வளவு கோபமாக படியில் உட்கார்ந்திருந்தது ஏன்? CSK-வுடனான தோல்விக்கு பின் கூறிய ஆண்ட்ரே ரசுல்
சென்னை அணிக்கெதிரான ஆட்டத்தில், போல்டாகி வெளியேறிய ஆண்ட்ரே ரசுல் டிரசிங் அறைக்கு செல்லாமல், ஏன் செல்லும் படியில் உட்கார்ந்திருந்தேன் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.
நேற்று முன் தினம நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின, இப்போட்டியில் கொல்கத்தா அணி நூலிழையில் தோல்வியை சந்தித்தது.
குறிப்பாக கொல்கத்தா அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஆண்ட்ரே ரசுல், 22 பந்தில் 54 ஓட்டங்கள் குவித்து, மிகவும் மோசமான முறையில், கடைசி கட்டத்தில் சாம் கரண் பந்து வீச்சில் போல்டாகி வெளியேறினார்.
அவுட் ஆகி சென்ற அவர், டிரசிங் அறைக்கு செல்லாமல், வீரர்கள் செல்லும் படியிலே அமர்ந்திருந்தார். அதில் அவ்வளவு கோபத்தை தன் உள்ளே அடக்கியிருந்தார்.
இது குறித்து போட்டி முடிந்த பின் அவர் கூறுகையில், என்னால் அதை ஏற்று கொள்ள முடியவில்லை. பந்தை முழுவதுமாக விட்டு போல்டாகி விக்கெட் இழப்பதை எப்படி ஒரு பேட்ஸ்மேனால் ஏற்று கொள்ள முடியும்.
டிரசிங் அறைக்கு சென்று எனது சக வீரர்களை எப்படி சந்திப்பேன் என்று என தெரியாமால் தான் படியிலேயே அமர்ந்திருந்தேன். போட்டியை முடித்து கொடுக்காமல், வந்த வேலையையும் சரியாக செய்யாமல் எப்படி டிரசிங் ரூமிற்கு செல்ல முடியும்.
ஆனால் நம்பிக்கை இழந்துவிடவில்லை. வேலையை முடிக்காமல் மிக மோசமாக விக்கெட்டை இழந்தால் கோவம் தான் அதிகம் வரும்.
ஆனால் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் நான் அவுட்டான விதம் எனக்கு கோவத்தை உண்டாக்கவில்லை, மாறாக அதிகம் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன். எனது இதயமே நொறுங்கி விட்டதை போன்று உணர்ந்தேன் என்று கூறியுள்ளார்.