சென்னை அணியை காலி செய்ய பழைய வீரரை இறக்கும் கொல்கத்தா! தாக்குபிடிக்குமா டோனி படை?
சென்னை அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் முக்கிய வீரரை கொல்கத்தா களமிறக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நாளை நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியில் முக்கிய மாற்றம் இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை அந்தணியில் சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி மற்றும் ஷாகிப் அல் ஹசன், ஷிவம் மாவி மற்றும் பெர்குசன் என கணக்கச்சிதமான பவுலிங் அட்டாக் உள்ளது.
இருப்பினும் நாளை பலம் வாய்ந்த சென்னை அணியுடன் மோதவுள்ளதால், கொல்கத்தா அணி காயம் காரணமாக விளையாடாமல் இருந்த ஆண்ட்ரூ ரசுலை இறக்க முடிவு செய்துள்ளதாம்.
ஷகிப் அல் ஹசனுக்கு பதிலாக ஆண்ட்ரூ ரசுலை கொல்கத்தா களமிறக்கவுள்ளது. இந்த தகவலை கொல்கத்தா அணியின் துணை பயிற்சியாளரான டேவிட் ஹஸ்ஸியும் உறுதிப்படுத்தியுள்ளார்.
அப்படி, ரசுல் கொல்கத்தா அணிக்கு மீண்டும் திரும்பினால், அது சென்னை அணிக்கு தான் பெரும் பிரச்சனையாக அமையும், ஏனெனில் ரசுல் சென்னை அணிக்கு எதிராக ஒரு நல்ல பேட்டிங் மற்றும் பவுலிங் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.