இளவரசர்கள் ஹரி ஆண்ட்ரூவை முக்கிய பொறுப்பிலிருந்து அகற்றவேண்டும்: நாடாளுமன்றத்தில் எழுந்துள்ள எதிர்ப்பு
இளவரசர்கள் ஹரியும் ஆண்ட்ரூவும் முக்கிய பொறுப்பில் நீடிப்பதற்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு உருவாகியுள்ளது.
அரசின் ஆலோசகர்கள் பொறுப்பில் ஹரியும் ஆண்ட்ரூவும்
பிரித்தானியாவைப் பொருத்தவரை, பிரித்தானிய மன்னர் வெளிநாடு சென்றிருக்கும் நேரத்தில், அல்லது, அவருக்கு உடல் நலமில்லாதபோது, அவருக்குப் பதில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக அரசின் ஆலோசகர்கள் என்னும் நான்கு முதல் ஐந்து பேர் பொறுப்பிலிருப்பார்கள்.
தற்போது, மன்னருடைய மனைவி என்னும் முறையில் ராணி கமீலா, இளவரசர்கள் வில்லியம், ஆண்ட்ரூ மற்றும் ஹரி மற்றும் இளவரசி பீட்ரைஸ் ஆகியோர் அந்தப் பொறுப்பில் இருக்கிறார்கள்.
மன்னர் விடுத்த கோரிக்கை
இந்நிலையில், தனது சகோதரி ஆன், மற்றும் சகோதரர் எட்வர்ட் ஆகியோரையும் அரசின் ஆலோசகர்கள் பட்டியலில் இணைக்கக் கோரி ஆவன செய்யுமாறு முறைப்படி பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளார் மன்னர் சார்லஸ்.
அது தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
அந்த விவாதத்தின்போது, இளவரசர்கள் ஆண்ட்ரூ மற்றும் ஹரியை அரசின் ஆலோசகர்கள் பொறுப்பிலிருந்து அகற்றவேண்டும் என சில நாடாளுமன்ற உறுப்பினர்கள்குரல் எழுப்பியுள்ளார்கள்.
தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கு ராஜ கடமைகளை நிறைவேற்றாத யாரும் அரசின் ஆலோசகர்கள் பொறுப்பிலிருக்கமுடியாது என்பது சட்டம்.
பாலியல் குற்றவாளியான அமெரிக்கக் கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்ததால், இளவரசர் ஆண்ட்ரூ ராஜ கடமைகளிலிருந்து வெளியேறினார்.
image - POOL
அமெரிக்காவில் வாழும் இளவரசர் ஹரியும், ராஜ கடமைகளைச் செய்வதிலிருந்து விலகிவிட்டார்.
ஆகவே, அவர்கள் இருவருமே அரசின் ஆலோசகர்கள் பொறுப்பிலிருந்து அகற்றப்படவேண்டும் என Lord Berkeley கேட்டுக்கொண்டுள்ளார்.
அவரைப் போலவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், இளவரசர்கள் ஆண்ட்ரூ மற்றும் ஹரியின் நிலைப்பாடு தொடர்பில் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கப்படவேண்டும் என குரல் கொடுக்கத் துவங்கியுள்ளனர்.
இதற்கிடையில், அடுத்த ஆண்டு மன்னர் சார்லஸ் வெளிநாடு செல்ல இருப்பதால், அரசின் ஆலோசகர்கள் பொறுப்பு தொடர்பில் விரைவில் ஒரு முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.