ஆட்சிக்கு வரும் முன்பே புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆயுதத்தை கையில் எடுத்துள்ள பிரதமர்
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய புலம்பெயர்தல் மற்றும் புகலிட மசோதாவுக்கு, பிரதமராக பொறுப்பேற்க இருக்கும் ஆன்டி பர்னாம் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவுக்கு புதிய பிரதமர்
பிரித்தானிய அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.
அதாவது, தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று பிரித்தானியாவின் பிரதமரானார், சர் கெய்ர் ஸ்டார்மர்.

ஆனால், அவர் புலம்பெயர்தலை போதுமான அளவுக்கு கட்டுப்படுத்தவில்லை என கருத்து உருவாகவே, அதை பயன்படுத்திக்கொண்டு அவரது பதவியை காலி செய்ய அவரது கட்சிக்குள்ளேயே சிலர் தயாரானார்கள்.
அதன்படி, அவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக ஸ்டார்மர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய, அவரது இருக்கையில் அமர்ந்துகொள்ள முடிவு செய்துள்ளார் ஆன்டி பர்னாம் என்னும் நபர்.
விடயம் என்னவென்றால், அவருக்கு லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே அமோக ஆதரவு உள்ளது.

இந்நிலையில், தன் பங்குக்கு தன் பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக, புதிய பிரதமர் பதவியேற்கும் முன்பே, அவசர அவசரமாக புலம்பெயர்தல் மற்றும் புகலிட மசோதா ஒன்றை முன்வைத்துள்ளார் பிரித்தானிய உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத்!
புலம்பெயர்தல் மற்றும் புகலிட மசோதா என அழைக்கப்பட்டாலும், அது புலம்பெயர்தலைக் கடுமையாக கட்டுப்படுத்தக்கூடிய வகையிலான ஒரு மசோதா ஆகும்.
அகதி நிலை வழங்கப்படுவோருக்கான பாதுகாப்பு காலகட்டத்தைக் குறைத்தல், புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு அரசு வழங்கிய நிதியை திருப்பிச் செலுத்த வைத்தல், குடியமர காத்திருக்கும் காலகட்டம் நீட்டிப்பு, ஆங்கில மொழிப்புலமையின் அவசியம் என பல கடுமையான விதிகள் அந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன.
ஆட்சிக்கு வரும் முன்பே...
இந்நிலையில், ஷபானா முன்வைத்த புலம்பெயர்தல் மற்றும் புகலிட மசோதாவுக்கு ஆன்டி பர்னாம் தன் ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
நேற்று பிரித்தானிய நாடாளுமன்றத்தின் கீழவையில் ஷபானா முன்வைத்த புலம்பெயர்தல் மற்றும் புகலிட மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில், மசோதாவுக்கு ஆதரவாக 264 பேரும், எதிராக 90 பேரும் வாக்களிக்க, மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆக, முந்தைய ஆட்சியாளர்களைப் போலவே, ஆன்டி பர்னாமும், புலம்பெயர்தல் என்னும் ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது தெளிவாகியுள்ளது!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |