பிரித்தானிய பிரதமராக விரும்பும் நபரை கேள்விகளால் திணறடித்த ஊடகவியலாளர்கள்
பிரித்தானியாவின் பிரதமராக கெய்ர் ஸ்டார்மரை தேர்ந்தெடுத்தது பிரித்தானிய மக்கள்.
ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவரை பதவியிலிருந்து இறக்கிவிட்டு பிரதமர் நாற்காலியில் அமரத் துடிக்கிறார் ஒருவர்.
ஆக, அவரை மடக்கி ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்க, பதில் கூற இயலாமல் திணறியுள்ளார் அவர்!
பிரித்தானிய பிரதமராக விரும்பும் நபர்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கெய்ர் ஸ்டார்மரை பதவியிலிருந்து இறக்கிவிட்டு பிரதமர் நாற்காலியில் அமரத் துடிக்கிறார் ஆன்டி பர்னாம் என்னும் நபர்.

கிரேட்டர் மான்செஸ்டரின் மேயராக இருந்த ஆன்டி, பிரதமர் பதவியைக் கைப்பற்றுவதற்காகவே மேக்கர்ஃபீல்ட் தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார்.
கேள்விகளால் திணறடித்த ஊடகவியலாளர்கள் அதாவது, ஆன்டியை மக்கள் பிரதமராக தேர்ந்தெடுக்கவில்லை, அவரே பிரதமர் பதவியைக் கைப்பற்ற விரும்புகிறார்.
விடயம் என்னவென்றால், முன்னர் கன்சர்வேட்டிவ் ஆட்சியின்போது இதேபோல லிஸ் ட்ரஸ்ஸை பதவிலியிருந்து இறக்கிவிட்டு ரிஷி சுனக் பிரதமர் இருக்கையில் அமர்ந்தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் நடத்திதான் பிரதமரை தேர்ந்தெடுக்கவேண்டும் என குரல் எழுப்பியவர் ஆன்டி.
ஆகவே, ரிஷி சுனக் பிரதமரானபோது தேர்தல் நடத்தவேண்டும் என குரல் எழுப்பிய நீங்களே இப்போது ஸ்டார்மரை பதவியிலிருந்து இறக்கிவிட்டு பிரதமராக முயல்கிறீர்களே என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்ப, பதில் கூற முடியாமல் திணறிப்போயுள்ளார் ஆன்டி.
அதேபோல, கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான கெமி பேடனோக்கும், ரீஃபார்ம் யூகே கட்சித் தலைவரான நைஜல் ஃபராஜும் கூட, யார் நாட்டை ஆளவேண்டும் என ஆன்டி பிரித்தானிய மக்களைக் கேட்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். அதாவது, தேர்தல் நடத்தவேண்டும் என கூறியுள்ளனர்.

மேலும், கெய்ர் ஸ்டார்மர் பதவி விலகியதால் வருத்தத்தில் இருக்கும் அவரது ஆதரவாளர்கள் சிலரும் ஆன்டியை எதிர்த்து போட்டியிடக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகிவருகின்றன.
ஆக, ஆன்டி நினைத்ததுபோல் எளிதாக பிரதமர் இருக்கை கிடைத்துவிடாது போலிருக்கிறதே!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |