முரளி அய்யா இது எல்லாம் பொய்! நாங்க கேட்பது இது தான்: முத்தையா முரளிதரனின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த ஏஞ்சலே-திமுத் கருணரத்னே

Angelo Mathews Dimuth Karunaratne SrilankaCricketTeam MutiahMuralidharan
By Kaviarasan Jul 17, 2021 09:14 PM GMT
Report

இலங்கை அணி வீரர்களான ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் திமுத் கருணரத்னே ஆகியோர் முரளிதரன் அளித்த பேட்டிக்கு பதில் அளிக்கும் வகையில்  கடிதம் எழுதியுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் வாரியம், சமீபத்தில் தங்களது வீரர்களுக்கு சிறப்பான செயல்பாட்டிற்கு ஏற்றவாறு ஊதியம் வழங்கப்படும் என்ற முறையை கொண்டு வந்தது. ஆனால் இதற்கு இலங்கை வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த பிரச்சனை முடியும் வரை ஒவ்வொரு தொடருக்கும் தனித்தனியாக ஒப்பந்தம் போட முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஒப்பந்த பிரச்னை முடியும் வரை தனித்தனி தொடரில் ஒப்பந்தங்களில் கையெழுத்திட முடியாது என சில வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், இது ஒட்டு மொத்த அணியையும் பாதிக்கிறது என்ற பிரச்சனை உருவாகியுள்ளது.

முரளி அய்யா இது எல்லாம் பொய்! நாங்க கேட்பது இது தான்: முத்தையா முரளிதரனின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த ஏஞ்சலே-திமுத் கருணரத்னே | Angelo Dimuth Write To Muralitharan Allegations

இதற்கிடையில், இலங்கை அணியின் முன்னாள் வீரரும், இலங்கை கிரிக்கெட் (SLC) தொழில்நுட்ப குழு உறுப்பினருமான முத்தையா முரளிதரன், சமீபத்தில் அளித்த தொலைக்காட்சி பேட்டியின் போது, இந்த பிரச்சனை குறித்து, சிலர் மீது குற்றச்சாட்டுகளையும் முன் வைத்தார்.

அதில் குறிப்பாக அவர் சம்பள விவகாரம் தான், இந்த பிரச்சனைக்கு காரணம் என்பது போல் கூறியிருந்தார்.

இது குறித்து இலங்கை அணி வீரர்களான ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் இந்த வார தொடக்கத்தில் ஒரு தொலைக்காட்சி  நிகழ்ச்சியின் போது அவர்கள் மீது சுமத்தப்பட்ட பல குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் முத்தையா முரளிதரனுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அதில், அன்புள்ள முரளி அய்யா என்று ஆரம்பிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, நீங்கள் ஒரு தேசிய தொலைக்காட்சியில் ஒப்பந்த பிரச்சனைகள் பற்றி பேசியது, தவறானவை.

முரளி அய்யா இது எல்லாம் பொய்! நாங்க கேட்பது இது தான்: முத்தையா முரளிதரனின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த ஏஞ்சலே-திமுத் கருணரத்னே | Angelo Dimuth Write To Muralitharan Allegations

ஏனெனில், வீரர்களின் ஒப்பந்த பிரச்சனைக்கு பணம் என்பது நீங்கள் கூறுவது முற்றிலும் நியாமற்றது மற்றும் பொய்யானது. இந்த குற்றச்சாட்டை நாங்கள் முற்றிலும் நிராகரிக்கிறோம், மறுக்கிறோம்.

இதைப் பற்றி சரியாக தெரிவிக்கப்படாமல் இருக்கலாம் அல்லது தவறான தகவல்கள் வழங்கப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறோம். நீங்கள் இதை ஒரு தொலைக்காட்சியில் வந்து பேசாமல், நேரடியாக வீரர்களை கூட்டி இதை செய்திருக்கலாம், நீங்கள் விளையாடிய காலக்கட்டத்தில் மிகப் பெரிய சாதனைகள் செய்துள்ளீர்கள்.

இலங்கை இதுவரை உருவாக்கிய மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான நீங்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அனைவருக்கும் ஒரு முன்மாதிரி மற்றும் உத்வேகத்தின் ஆதாரமாக இருக்கிறீர்கள்.

நாங்கள் இருவரும் உங்களுடன் அணித் தோழர்களாக விளையாடியுள்ளோம், உங்களுடனான எங்கள் உறவை நாங்கள் பொக்கிஷமாகக் கருதுகிறோம். நாங்கள் இருவர் மற்றும் இரண்டு மூத்த வீரர்கள் இந்த ஒப்பந்த விபரம் தொடர்பான சிக்கலை துவங்கினோம்.

முரளி அய்யா இது எல்லாம் பொய்! நாங்க கேட்பது இது தான்: முத்தையா முரளிதரனின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த ஏஞ்சலே-திமுத் கருணரத்னே | Angelo Dimuth Write To Muralitharan Allegations

ஏனெனில் இது எங்கள் கொடுக்கப்படும் பணம் குறைக்கப்பட்டதால், பாதிக்கப்பட்டதால், இதை துவக்கினோம் மேலும், இந்த ஆண்டு 24 வீரர்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன.

அதே நேரத்தில் பலருக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்படவில்லை. ஒப்பந்தங்கள் பெறப்படாத வீரர்கள் சிலர் தாங்கள் நியாயமான முறையில் சிறப்பாக விளையாடியதாக உணர்ந்தனர். அப்படி இருக்கும் போது, அவர்களுக்கு ஏன் ஒப்பந்தங்கள் வழங்கப்படவில்லை. இது குறித்து ஒரு தெளிவான காரணம் சொல்லப்படவில்லை.

இது குறித்து ஒரு தெளிவான விளக்கம் கொடுத்திருந்தால், வீரர்களுக்கான சந்தேகங்கள் நீங்கியிருக்கும், இதை வீரர்களும் உணர்ந்தனர். இந்த விஷயத்தில் நாங்கள் ஒரு அணியாக ஒன்றாக நின்றோம். இந்த ஒப்பந்த விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை தேவை என்று கூறுகிறோம்.

முரளி அய்யா இது எல்லாம் பொய்! நாங்க கேட்பது இது தான்: முத்தையா முரளிதரனின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த ஏஞ்சலே-திமுத் கருணரத்னே | Angelo Dimuth Write To Muralitharan Allegations

அதையே 38 வீரர்களும் பிரதிபலிக்கின்றனர். கடந்த 2016-ஆம் ஆண்டில், நாங்கள் (ஏஞ்சலோ மற்றும் திமுத்) இருவரும் உலக நம்பர் 1 இடத்தைப் பிடித்த அணியின் ஒரு பகுதியாக இருந்தோம்.

அதாவது வார்ன்-முரளி டிராபியில் அவுஸ்திரேலியா 3-0 (ஒரு கேப்டனாகவும் ஒரு வீரராகவும்). அந்தத் தொடரில், எங்கள் சுழல் மைதானத்தில், இலங்கை அணியை எதிர்கொள்ள அவுஸ்திரேலியாவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீங்கள் அவுஸ்திரேலியாவால் ஒரு ஆலோசகராக ஒப்பந்தம் செய்யப்பட்டீர்கள்.

இதை இந்த குழு, ஒரு தொழில்முறை என்று தான் பார்த்தது. இதை ஒருபோதும் பணத்திற்காக என்று கேள்வி எழுப்பவோ அல்லது ஈர்க்கவோ இல்லை. அப்போது, உலகின் நம்பர் 1 அணிக்கு உங்கள் ஆலோசனை தேவை என்று வீரர்களாகிய நாங்கள் அப்போது மகிழ்ச்சியாக இருந்தோம்.

மேலும், வீரர்கள் தங்கள் உடையில் தேசியக் கொடி இல்லாமல் விளையாட விரும்புவதாக கூறுவது, ஒரு பொய்யான குற்றச்சாட்டு, ஆதாரமற்றது. நாங்கள் 15 மாதங்கள் எந்த ஒரு சம்பளமும் இன்றி கடந்த 2011-ஆம் ஆண்டு எங்கள் நாட்டிற்காக விளையாடிய அணியில் ஒரு பகுதியாக இருந்தோம்.

முரளி அய்யா இது எல்லாம் பொய்! நாங்க கேட்பது இது தான்: முத்தையா முரளிதரனின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த ஏஞ்சலே-திமுத் கருணரத்னே | Angelo Dimuth Write To Muralitharan Allegations

இதை நாங்கள் உங்களுக்கு நினைவுபடுத்தி கொள்கிறோம். கடந்த அக்டோபர் 2020 முதல், வீரர்கள் மத்திய ஒப்பந்தங்கள் இல்லாமல் விளையாடுகிறார்கள்.

நாங்கள் எப்போதும் நம் நாட்டுக்காக விளையாடினோம், அப்போதும் சரி, ​​இப்போதும் சரி. சச்சரவுகள் ஏற்படும் போது, வீரர்கள் எப்போதும் ஒன்றாக நின்றார்கள்,

கடந்த காலமும் நிகழ்காலமும் தொடர்ந்து அவ்வாறு செய்ய வேண்டும். இந்த நிகழ்வில் அனைத்து வீரர்களும், நுவான் பிரதீப், அவிஸ்கா பெர்னாண்டோ, தில்ருவான் பெரேரா, அசிதா பெர்னாண்டோ, பானுகா ராஜபக்ஷ, மற்றும் இன்னும் சில ஒப்பந்தங்களை வழங்காத 14 வீரர்களுக்காகவும் நின்றார்கள் என்பது உங்களுக்குத் தெரியவில்லை.

 கடந்த இரண்டு ஆண்டுகளில் நியாயமான முறையில். பொருள் காலப்பகுதியில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்களில் அவிஸ்கா பெர்னாண்டோவும் ஒருவர்.

எந்தவொரு வீரருக்கும் வெளிப்படைத்தன்மை கேட்டதால் எந்த ஒப்பந்தமும் வழங்கப்படக்கூடாது என்று நீங்கள் கூறுவது நியாயமா? உங்களைச் சந்தித்து எதையும் தெளிவுபடுத்த நாங்கள் விரும்புகிறோம்.

எங்களுக்கிடையில் இதுபோன்ற எந்தவொரு சர்ச்சையும் இல்லை என்று நாங்கள் இன்னும் நம்புகிறோம். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திலிருந்து நாம் முன்னேற முடியும்,

முரளி அய்யா இது எல்லாம் பொய்! நாங்க கேட்பது இது தான்: முத்தையா முரளிதரனின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த ஏஞ்சலே-திமுத் கருணரத்னே | Angelo Dimuth Write To Muralitharan Allegations

மேலும் விளையாட்டும் நாடும் அவ்வாறு செய்ய வேண்டும். இலங்கையை அதன் வெற்றிகரமான வழிகளில் கொண்டு வருவதை உறுதி செய்வதற்காக எங்கள் அனைத்து வீரர்களையும் ஊக்குவிப்பதற்காக நிர்வாகமும் எமது வீரர்களும் மிக நெருக்கமாக பணியாற்ற வேண்டும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

இந்த கடினமான காலங்களில் கிரிக்கெட் கமிட்டியின் உறுப்பினராக இருப்பதோடு, அனைவரையும் ஊக்குவிக்கவும், அணிக்கு உதவியாகவும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நீங்கள் எங்கள் தாய்நாட்டின் ஒரு சின்னம், உங்கள் சாதனைகள் ஒருபோதும் முந்தப்படாது. எங்கள் இலங்கைக் கொடி பறக்கும் உயர் முரளி அய்யாவை வைத்திருங்கள்!

தங்கள் உண்மையுள்ள,

திமுத் கருணாரத்ன & ஏஞ்சலோ மேத்யூஸ் என்று குறிப்பிட்டுள்ளனர்.

மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பாவற்குளம், Toronto, Canada

05 Mar, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

26 Feb, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், கனடா, Canada, India

07 Mar, 2011
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கரம்பன் தெற்கு, Markham, Canada

04 Mar, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுன்னாகம், London, United Kingdom

01 Mar, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Ajax, Canada

06 Mar, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Mar, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, நியூ யோர்க், United States

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி

16 Feb, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US