இளைஞர்கள் இலங்கை கிரிக்கெட்டை எடுக்கும் நேரமிது: கடைசி போட்டியை டிராவில் முடித்த ஏஞ்சலோ மேத்யூஸ்
இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது.
டிரா
காலி டெஸ்டின் கடைசி நாள் ஆட்டம் இன்று நடந்தது. வங்காளதேச அணி 285 ஓட்டங்களுடன் டிக்ளேர் செய்தது.
ஷாண்டோ 125 ஓட்டங்களும், ஷாத்மான் 76 ஓட்டங்களும் எடுத்தனர். ரஹீம் 49 ஓட்டங்களில் ரன்அவுட் ஆனார்.
பின்னர் 296 ஓட்டங்கள் இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி, நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 72 ஓட்டங்கள் எடுத்தது.
இதனால் போட்டி எந்த அணிக்கும் வெற்றி தோல்வி இன்றி டிராவில் முடிந்தது. பத்தும் நிசங்க 24 ஓட்டங்கள் எடுத்தார். நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ ஆட்டநாயகன் விருது பெற்றார்.
ஏஞ்சலோ மேத்யூஸ்
தனது கடைசி இன்னிங்சில் ஆடிய ஏஞ்சலோ மேத்யூஸ் (Angelo Mathews) 45 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 8 ஓட்டங்களே எடுத்தார்.
போட்டிக்கு பின்னர் பேசிய அவர், "நான் ஓய்வு அறிவித்ததில் இருந்து எனக்கு கிடைத்த அன்பை நம்பவே முடியவில்லை. என்னை ஆதரித்த அனைவருக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
இது ஒரு எளிதான பயணம் அல்ல - நிறைய ஏற்ற தாழ்வுகள். இளைய வீரர்கள் துடுப்பைப் பிடித்து, இலங்கை கிரிக்கெட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டிய நேரம் இது" என்றார்.
An emotional moment for Sri Lanka 💙#SLvBAN pic.twitter.com/fRXHw9cSrP
— ESPNcricinfo (@ESPNcricinfo) June 21, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |