ஐபிஎல் தொடரில் புதிய அணி? முதலமைச்சர் திட்டம்

TATA IPL Bihar
By Karthikraja May 23, 2026 12:04 PM GMT
Report

2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் பிசிசிஐயால் நடத்தப்பட்டு வருகிறது.

முதலில் 8 அணிகள் இருந்த நிலையில், 2022 ஐபிஎல் தொடர் முதல், கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு தற்போது 10 அணிகளுடன் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பீகார் மாநிலத்திற்கென தனி ஐபிஎல் அணி உருவாக்க வேண்டும் என வேதாந்தா குழும தலைவரும் பிரபல தொழிலதிபருமான அனில் அகர்வால் வலியுறுத்தியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் பீகாருக்கு அணி?

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளைப் போல, பீகாரும் தனக்கென ஒரு அணியைக் கொண்டிருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லையா? 

பீகாரின் மண், நாட்டிற்கு பல சிறந்த கிரிக்கெட் வீரர்களை வழங்கியுள்ளது. 

ஐபிஎல் தொடரில் புதிய அணி? முதலமைச்சர் திட்டம் | Anil Agarwal Bihar Cm Urge Ipl Team For Bihar

பாட்னாவில் பிறந்த இஷான் கிஷன், எதிர்கொண்ட பந்துகளின் அடிப்படையில் அதிவேக ஒருநாள் இரட்டைச் சதம் அடித்தார். சமஸ்திபூரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி, ஐபிஎல் போட்டியில் அறிமுகமான மிக இளம் வயது வீரர் ஆனார். மேலும் இன்று, கோபால்கஞ்சில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த சாகிப் ஹுசைனின் அற்புதமான பந்துவீச்சின் மீது உலகமே தன் பார்வையைச் செலுத்துகிறது.

ஆனால் ஒரு விஷயம் என்னை எப்போதும் உறுத்துகிறது: நமது பீகார், கிரிக்கெட்டில் நமக்கு உரிமையான அங்கீகாரத்தையும் அடையாளத்தையும் ஏன் இன்னும் பெறவில்லை? 

விராட் கோலிக்கு இருந்த உளவியல் நோய் - மீண்டு வர உதவிய டிராவிட்

விராட் கோலிக்கு இருந்த உளவியல் நோய் - மீண்டு வர உதவிய டிராவிட்

பீகாரின் இளைஞர்கள் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்க முழு வாய்ப்புகளைப் பெறுவதையும், நமது வீரர்கள் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பையும் ஆதரவையும் இங்கேயே பீகாரில் பெறுவதையும் உறுதி செய்வதே எனது கனவாகவும் முயற்சியாகவும் இருந்து வருகிறது.

நமது குழந்தைகளுக்கு சரியான உத்வேகமும் வசதிகளும் கிடைத்தால், நமது பீகாரில் இருந்து உருவாகும் அணி உலகின் சிறந்த அணியாக மாறும் என்பதில் நான் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன். 

ஐபிஎல் தொடரில் இணைய உள்ள பாகிஸ்தான் வீரர்?

ஐபிஎல் தொடரில் இணைய உள்ள பாகிஸ்தான் வீரர்?

இந்த முயற்சியில் நான் பீகார் இளைஞர்களுடன் உறுதியாக நிற்கிறேன். பீகார் கிரிக்கெட் அணியையும் அதன் வீரர்களையும் இங்கு முன்னேற்றுவதற்கு என் தரப்பிலிருந்து நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவேன். 

என்னைப் பொறுத்தவரை, பீகார் என்பது வெறும் மாநிலம் மட்டுமல்ல அது ஒரு உணர்வு. நமது மண்ணின் திறமை களத்தில் ஜொலிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" என தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஆதரவு

ஐபிஎல் தொடரில் புதிய அணி? முதலமைச்சர் திட்டம் | Anil Agarwal Bihar Cm Urge Ipl Team For Bihar

அனில் அகர்வாலின் கருத்துக்கு பதிலளித்துள்ள பீகார் முதலமைச்சர் சாம்ராட் சௌத்ரி, "நான் உங்களுடன் முழுமையாக உடன்படுகிறேன். பீகாரின் கிரிக்கெட் 'உணர்ச்சிக்காக', அரசு ஒரு தெளிவான 'பார்வையுடன்' ஒரு 'செயல்திட்ட' முறையில் செயல்பட்டு வருகிறது. 

உங்கள் ஒத்துழைப்புடன், பீகார் கிரிக்கெட் அணி தொடர்பாக நிச்சயமாக ஒரு சாதகமான முடிவு எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார். 

ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்த தமிழ்நாட்டு வீரர்

ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்த தமிழ்நாட்டு வீரர்

அதற்கு பதிலளித்த அனில் அகர்வால், "எனது முழு ஆதரவும் ஒத்துழைப்பும் உங்களுக்கு உண்டு. பீகாரின் அனைத்து விளையாட்டுத் திறமையாளர்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளின் எண்ணிக்கையை 94 ஆக உயர்த்துவது குறித்து பிசிசிஐ பரிசீலித்து வருவதாக தெரிவித்த ஐபிஎல் சேர்மன் அருண் துமால், அணிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் திட்டம் இப்போதைக்கு இல்லை. 10 அணிகள் என்பதே நன்றாக உள்ளது. எனினும், இது குறித்து அப்போதைக்கு முடிவு எடுக்கப்படும்" என தெரிவித்தார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US