ரோகித், ஹார்திக் இல்லை! CSK-க்கு எதிராக புதிய வீரரை இறக்கிய மும்பை: யார் அவர் தெரியுமா?
சென்னை அணிக்கெதிரான போட்டியில் ரோகித் மற்றும் ஹார்திக் இல்லாத காரணத்தினால் புதிய வீரரை மும்பை அணி களமிறக்கியுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர், இந்த ஆண்டும் வழக்கம் போல் நடத்தப்பட்டது.
ஆனால், கொரோனா பரவல் காரணமாக அந்த தொடர் ஒத்தி வைக்கப்பட்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் படி இந்த தொடர் இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்கியது.
இந்த முதல் போட்டியிலே மும்பை மற்றும் சென்னை அணி மோதுகிறது. இதில் டாஸ் வென்று சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்நிலையில், இப்போட்டியில் மும்பை அணியின் மிகப் பெரும் அதிரடி ஆட்டக்காரரான ரோகித்சர்மா இல்லை, அதே போன்று ஆல் ரவுண்டரான ஹார்திக் பாண்ட்யாவும் இல்லை. இது மும்பை அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது.
ரோகித் இல்லாத காரணத்தினால், பொல்லார்ட் மும்பை அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.
🚨 Anmolpreet Singh is all set to make his debut tonight against CSK 🙌
— Mumbai Indians (@mipaltan) September 19, 2021
Go well, champ! 💪💙#OneFamily #MumbaiIndians #IPL2021 #CSKvMI @iamanmolpreet28 pic.twitter.com/zZYDUEW9Zg
இருப்பினும் மும்பை அணி அதற்கு ஏற்றவகையில் Anmolpreet Singh என்ற புதிய வீரரை களமிறக்கியுள்ளது. 23 வயது மதிக்கத்தக்க Anmolpreet Singh பஞ்சாப்பை சேர்ந்தவர்.
ரஞ்சி டிராபி தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இவரை, கடந்த 2019-ஆம் ஆண்டு மும்பை அணி வாங்கியது.
முதல் முறையாக ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள இவரின் ஆட்டம் இதுவரை டி20 போட்டியில் எந்த அளவிற்கு இருக்கும் என்று தெரியவில்லை. இன்றைய போட்டியில் ரோகித் இல்லாத காரணத்தினால் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.