அர்மேனியா-அஜர்பைஜான் மோதலுக்கு தீர்வு காண இதுதான் வழி - ஜேர்மனி வெளியுறவு அமைச்சர்
ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சர் Annalena Baerbock அர்மேனியா மற்றும் அஜர்பைஜான் மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Annalena Baerbock
அர்மேனியாவின் Yerevan நகருக்கு சென்றுள்ள Annalena Baerbock, அஜர்பைஜான் மற்றும் அர்மேனியா இடையே நீண்ட கால அமைதிக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதைத் தவிர வேறு வழியில்லை என தெரிவித்துள்ளார்.
AP Photo/Bebeto Matthews
அத்துடன் அர்மேனிய வெளியுறவு அமைச்சர் அராரத் மிர்சோயனுடனான பேச்சுவார்த்தைக்கு பின், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் தலைமையிலான மத்தியஸ்த முயற்சிகள் அமைதிக்கான விரைவான வழியைக் காட்டக்கூடிய ஒரு பாலமாகும் எனவும் அவர் கூறினார்.
இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், 'எல்லை நிர்ணயம் உட்பட பல்வேறு பிரச்சனைகளில் Yerevan மற்றும் Baku முன்னேற்றம் அடைந்துள்ளன. மேலும் இது நீங்கள் ஒரு அமைதியான தீர்விற்கு வர முடியும் என்ற நம்பிக்கையை உயர்த்தியுள்ளது' என்றார்.
வாக்குறுதி மீறல்
இதனைத் தொடர்ந்து பேசிய அராரத், பிராந்தியத்தில் அமைதியை அடைவதற்கான ஜேர்மனியின் முயற்சிகளை ஒப்புக்கொண்டார். ஆனால், அஜர்பைஜான் விரோதப் போக்கில் ஈடுபட மாட்டோம் என்ற வாக்குறுதியை மீறிவிட்டதாக கூறிய அவர், பிராந்தியத்தில் அமைதியின் பாதையை எடுக்க அர்மேனியாவுக்கு விருப்பம் உள்ளது என்றார்.
ஆனால், மனிதாபிமான பிரச்சனைகள், அர்மேனிய போர் கைதிகள் மற்றும் இரு நாடுகளின் பிராந்திய இறையாண்மையை அங்கீகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிட்டார்.
Reuters
செப்டம்பர் மாதத்தில் அஜர்பைஜான் தாக்குதலுக்குப் பிறகு 1,00,000க்கும் மேற்பட்ட அர்மேனியர்கள் நாகோர்னோ-கராபாக் அர்மேனியாவிற்கு தப்பிச் சென்றனர், கிட்டத்தட்ட பிரதேசத்தை காலி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
AP Photo/Siranush Sargsyan
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |