இன்று தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆரம்பம் - விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை நாடு முழுவதிலும் உள்ள பரீட்சை நிலையங்களில் இன்று (15) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்த ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மொத்தம் 323,879 பரீட்சாத்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 2,849 நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதாகவும், இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள அனைத்து மாணவர்களும் இன்று காலை 9.00 மணிக்குள் தத்தமது பரீட்சை மண்டபங்களுக்கு வந்து அமருமாறும் ஆணையாளர் நாயகம் வலியுறுத்தினார்.
இதேவேளை புலமைப்பரிசில் பரீட்சை காலத்தில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த எவருக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை என பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னரும் பின்னரும் பிள்ளைகளின் மனநலம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென மனநல நிபுணரும் உளவியலாளருமான டொக்டர் ரூமி ரூபன் தெரிவித்தார்.
இது பாடசாலைகளுக்கான மாணவர்களைத் தெரிவு செய்து தகுதியான மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |