பிரித்தானியாவில் கொரோனா குறைந்தாலும்... இப்போது அங்கு கடந்த 24 மணி நேரத்தில் பலி எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
பிரித்தானியாவில் கொரோனா பலி எண்ணிக்கை குறைந்தாலும், நாள்தோறும் அங்கு கொரோனாவால் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.
ஐரோப்பாவில், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் பிரித்தானியா உள்ளது. இருப்பினும் கடந்த சில மாதங்களாக, அங்கு போடப்பட்டு வரும் தடுப்பூசிகள் மற்றும் ஊரடங்கின் கடுமையான விதிகள் போன்றவையால், முன்பை விட இப்போது பெரும் அளவு கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.
இதன் காரணமாக வரும் ஜுன் மாதம் பிரித்தானியா முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் பிரித்தானியாவில் 2,381 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 15 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் இதுவரை மொத்தம், 34,216,087 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 14,532,875 பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள புதிய புள்ளிவிவரங்களின் படி பார்த்தால், தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு நேர்மறையான பரிசோதனையின் 28 நாட்களுக்குள் 127,517 பேர் இறந்துள்ளனர்.