புலம்பெயர்ந்தோருக்கு எதிராக சுவிட்சர்லாந்தின் மற்றுமொரு நடவடிக்கை: அரசு அளித்துள்ள விளக்கம்
புலம்பெயர்ந்தோருக்கு எதிராக தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்துவரும் சுவிஸ் அரசு, மேலும் ஒரு நடவடிக்கையை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புலம்பெயர்ந்தோருக்கு எதிராக மற்றும் ஒரு நடவடிக்கை
பெற்றோர் இல்லாமல் தனியாக புலம்பெயர்ந்துள்ள வயது வராத பிள்ளைகளைக் கவனித்துக்கொள்வதற்காக, சுவிஸ் அரசு நியமித்துள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை, புலம்பெயர்தலுக்கான சுவிஸ் மாகாணச் செயலகம் குறைக்க இருக்கிறது.
தேசிய அளவில், 120 முழு நேர அலுவலர்களின் பணியிடங்கள் அவ்வகையில் குறைக்கப்பட உள்ளது.
சுவிட்சர்லாந்துக்கு, பெற்றோர் இல்லாமல் தனியாக புலம்பெயரும் வயது வராத பிள்ளைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட உள்ளதாக சுவிஸ் மாகாணச் செயலகம் தெரிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டில், பெற்றோர் இல்லாமல் தனியாக புலம்பெயர்ந்த வயது வராத பிள்ளைகளின் எண்ணிக்கை 1,500ஆக இருந்தது, தற்போது 600ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |