நேர்மையும், துணிச்சலும் தான் உங்கள் அடையாளம்! விராட் கோலி குறித்து மனைவி அனுஷ்கா நெகிழ்ச்சி கடிதம்!
இந்திய டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலிக்கு அவரது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா நெகிழ்ச்சியான கடிதம் ஒன்றை எழுதி தனது சமூக வலை பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் விராட் கோலி கேப்டனாக இருந்த 7 ஆண்டுகளில் என்ன நடந்தது மற்றும் விராட் கோலி சந்தித்துள்ள பல சவால்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
அவர் அந்த கடிதத்தில்,
மகேந்திர சிங் தோனி கேப்டன் பதவியை விட்டு விலகியதால், தாம் கேப்டனாக்கப் பட்டதாக கூறிய நாள் இன்னும் நினைவில் இருக்கிறது. நீங்கள், நான், தோனி மூவரும் 2014-ஆம் ஆண்டு அன்றைய தினம் பேசி சிரித்து கொண்டு இருந்தோம்.
அன்று உங்களது தாடியில் எவ்வளவு சீக்கிரம் நரை முடி வளர்கிறது என்று பார் என்று தோனி பேசி சிரித்து கொண்டு இருந்தார். அதே போல் உங்களது தாடியில் நரை முடி தென்பட்டன. அதை நான் உங்கள் அருகில் இருந்து கண்டேன்.
அதுமட்டுமல்லாமல் நீங்கள் அடைந்த வளர்ச்சியும், உங்களால் அணி வளர்ந்ததையும் நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன்.
இந்த 7 ஆண்டுகளில் இந்திய அணி பல வெற்றிகளை குவித்தது.2014-ஆம் ஆண்டு நாம் ஒரு குழந்தைகள் போன்ற மனநிலையில் இருந்தோம்.
நல்ல எண்ணத்துடன் நீங்கள் கேப்டன் பொறுப்பை ஏற்றீர்கள். ஆனால், களத்தில் மட்டுமல்லாமல், களத்திற்கு வெளியேவும் நீங்கள் பல சவால்களை சந்தித்தீர்கள்.
சவால்கள் நிறைந்தது தானே வாழ்கை.எதிர்பாராத சூழ்நிலைகள் நம்மை மிகவும் சோதிக்கும். ஆனால் உங்கள் நல்ல மனதால் களத்தில் முழு சக்தியையும் வெளிப்படுத்தி வெற்றி கண்டீர்கள். சில தோல்விகளில் கண்ணீருடன் இன்னும் என்ன செய்து இருக்கலாம் என்று யோசிப்பீர்கள். அது தான், நீங்கள் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் இருப்பது தான் எனக்கும், மற்றவர்களுக்கும் பிடிக்கும் இதனால் தான் என் கண்ணுக்கு நீங்கள் சிறந்தவராக தெரிகிறீர்கள்.
உங்கள் கண்ணில் அழுக்கற்ற நேர்மையும், நல்ல எண்ணங்களும் இருக்கும். நல்ல விசயத்திற்காக நீங்கள் என்றும் துணிந்து நின்றீர்கள். போராடினீர்கள்.
உங்களுக்கு பேராசை கிடையாது. உங்கள் காதல், என் காதல் அளவற்றது. உங்களது இந்த 7 ஆண்டு பயணம் நமது மகளுக்கு நல்ல பாடமாக இருக்கும். நீங்கள் சிறப்பாக நடந்து கொண்டீர்கள்.
இவ்வாறு அந்த கடிதத்தில் அனுஷ்கா சர்மா குறிப்பிட்டு இருந்தார். இந்தப் பதிவை இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 27 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.