பாமக-நாம் தமிழர் கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கிறதா? சீமான் அளித்த பதில்
எதிர்காலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியுடன் நாம் தமிழர் கட்சி கூட்டணி வைக்க வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து சீமான் தெளிவுப்படுத்தியுள்ளார்.
டிசம்பர் 30ம் திகதி இன்று இயற்சைவேளான் பேரறிஞர் நம்மாழ்வாரின் 8ம் ஆம் ஆண்டு நினைவுநாள் சென்னையில் உள்ள நாம் தமிழர் தலைமையகத்தில் அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துக்கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாம்மாழ்வார் படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
இதன் பின்னர் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.
இதன்போது, சமீபத்தில் நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் பாமக தலைமையிலான கூட்டணி அமையும் என ராமதாஸ் கூறியுள்ளார்.
எங்கள் தலைமையை ஏற்பவர்கள் எங்கள் கூட்டணிக்கு வரலாம், எனவே எதிர்காலத்தில் பாமக உடன் நாம் தமிழர் இணைய வாய்ப்பு இருக்கிறதா என சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த சீமான், ஜயா ராமதாஸ் மீது நான் வைத்திருக்கும் மதிப்பு அனைவருக்கும் தெரியும். பேரன்புடன் நான் அவருடன் ஒரே காலத்தில் பயணித்தவன்.
இப்போதும் அவர் மீது எனக்கு அதே அன்பு இருக்கிறது. ராமதாஸ் இப்படி ஒரு முடிவு எடுக்கிறார் என்றால் அதற்கான காரணத்தை அவர்கள் தான் கூற வேண்டும்.
நாங்கள் யாருடனும் சேர மாட்டோம். பாமக தலைமையில் ஒரு கூட்டணி அமைத்து அவர்கள் வென்றால் அதற்கு வாழ்த்துக்கள் என சீமான் கூறினார்.
நாம் தமிழர் கட்சி இதுவரை எந்த கட்சியுடனும் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது இல்லை, கடைசி வரை தனித்து நின்றே தேர்தலில் போட்டியிடுவோம் என்பதே அவர்களின் முக்கிய கொள்கையாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.