இளவரசி டயானாவின் ஆவியிடம் கேட்காமல் ஹரி எதையும் செய்வதில்லை: பிரித்தானியர் தெரிவித்துள்ள சுவாரஸ்ய தகவல்
மறைந்த இளவரசியும் தனது தாயுமான டயானாவிடம் கேட்காமல் இளவரசர் ஹரி எதையும் செய்வதில்லை என்கிறார் டயானாவின் சுயசரிதையை எழுதிய எழுத்தாளர் ஒருவர்.
இளவரசர் ஹரியுடன் எப்போதும் இருக்கும் டயானா
இளவரசர் ஹரியுடன் அவரது தாயாகிய இளவரசி டயானா எப்போதுமே ஆவி வடிவில் இருப்பதாக ஹரியே கூறியிருக்கிறார்.
Image: Tim Graham Photo Library via Getty Images
இன்விக்டஸ் விளையாட்டுப் போட்டிகளின்போது பேட்டியளித்த ஹரி, தன் தாய் ஆவி வடிவில் தன்னுடன் எப்போதுமே இருப்பதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக முன்னெப்போதும் இல்லாத அளவில் அவர் தன்னுடன் இருப்பதாகவும், தனது அண்ணன் வில்லியமுக்கு அவர் செய்யவேண்டிய கடமைகள் முடிந்துபோனதால், அவர் இப்போது தனக்கு உதவி வருவதாகவும் தெரிவித்தார் ஹரி.
தாயிடம் கேட்காமல் எதையும் செய்வதில்லை ஹரி
ஹரியின் கூற்றை உறுதி செய்வதுபோல, இளவரசி டயானாவின் சுயசரிதையை எழுதியவரான Andrew Morton என்பவரும், ஆவி வடிவில் தன்னுடனேயே இருக்கும் தன் தாய் டயானாவுடன் முதலில் ஆலோசிக்காமல் ஹரி எந்த முடிவையும் எடுத்ததில்லை என்று கூறியுள்ளார்.
Image: Tim Graham Photo Library via Getty Images